வீடியோ கால் வாயிலாக அடுத்த படத்தைத் தொடங்கிய விஷால்…!

வீடியோ கால் வாயிலாக அடுத்த படத்தைத் தொடங்கிய விஷால்…!

இயக்குனர் ஆனந்த் சங்கர் இரு தினங்களுக்கு முன்பு விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் தனது அடுத்த படம் உருவாக இருப்பதாக அறிவித்திருந்தார்.

இயக்குநர் ஆனந்த் சங்கர் ரிமா நம்பி, இருமுகன், நோட்டா ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.தற்போது Vishal30 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தை இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கிறார். மேலும் ஆர்யா இப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடிக்க உள்ளார்.

வீடியோ கால் வாயிலாக அடுத்த படத்தைத் தொடங்கிய விஷால்…!

டப்மாஷ் புகழ் மிருணாளினி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இந்தப்படத்தை வினோத் என்பவர் தயாரிக்கிறார்.

தற்போது விஷால் தனது படக்குழுவுடன் வீடியோ கான்பெரன்ஸில் பேசிய ஸ்க்ரீன்சாட் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் ஆர்யா, தமன், ஆனந்த் சங்கர், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் மற்றும் தயாரிப்பாளர் வினோத் ஆகியோர் பங்குபெற்றுள்னர்.

வீடியோ கால் வாயிலாக அடுத்த படத்தைத் தொடங்கிய விஷால்…!

“இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. அற்புதமான நடிகர்கள் மற்றும் குழுவினருடன் விஷால் 30 படவேலைகள் இன்று தொடங்கியுள்ளது. இந்த அதிரடியான ஆக்ஷன் திரைப்படத்தில் ஆனந்த் ஷங்கருடன் தொடங்குகிறேன். கூடுதலாக எனது சிறந்த நண்பர் ஆர்யாவும் என்னுடன் பணியாற்றுகிறார். நிச்சயமாக ராக் செய்யபோகிறது. தயாரிப்பாளர் வினோத்திற்கு வாழ்த்துக்கள். இப்படத்திற்கு இசையமைப்பாளர் எஸ் தமன் அவர்களை வரவேற்கிறேன்” என்று விஷால் தெரிவித்துள்ளார்.

Share this story