கவர்ச்சியிலிருந்து காவல் துறைக்கு மாறும் யாஷிகா!

கவர்ச்சியிலிருந்து காவல் துறைக்கு மாறும் யாஷிகா!

நடிகை யாஷிகா புதிய படம் ஒன்றில் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை யாஷிகா ஆனந்த் சல்பர் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் யுவன் என்பவர் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் புதுமையாக இசையமைப்பாளர் சித்தார்த் விபின் வில்லனாக நடிக்க உள்ளாராம். இவர் இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கவர்ச்சியிலிருந்து காவல் துறைக்கு மாறும் யாஷிகா!

“யாஷிகா வழக்கமாக செய்யும் கவர்ச்சி பாத்திரம் அல்லாது இந்தப் படத்தில் சப்-இன்ஸ்பெக்டராக ஆசைப்படும் ஒரு இளம் பெண்ணாக யாஷிகா ஒரு தீவிரமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். யாஷிகாவுக்கு ஒரு அழைப்பு வருகிறது, அதன்மூலம் ஒரு கடத்தல் வழக்கை விசாரிக்கத் தொடங்குகிறார். இது வில்லனுக்கு அருகில் அவரை கொண்டு செல்கிறது.” என்று இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கவர்ச்சியிலிருந்து காவல் துறைக்கு மாறும் யாஷிகா!

இப்படத்தில் நடிப்பது மட்டுமில்லாமல் இசையும் அமைக்கவுள்ளாராம். இப்படத்தின் கதை சென்னையில் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நாளை பூஜையுடன் துவங்க உள்ளது. இந்த படத்தை 50 நாட்களில் படமாக்க திட்டமிட்டுள்ளதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Share this story