தெலுங்கில் ரீமேக் ஆகும் ‘என்னை அறிந்தால்’… நடிக்கப்போவது யார் தெரியுமா!?

தெலுங்கில் ரீமேக் ஆகும் ‘என்னை அறிந்தால்’… நடிக்கப்போவது யார் தெரியுமா!?

என்னை அறிந்தால் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆக இருப்பதாக டோலிவுட் சினிமா வட்டாரங்கள் பேசி வருகின்றன.

மெகா ஸ்டார் சிரஞ்சீவி தற்போது மற்ற மொழிகளில் ஹிட் ஆன படங்களின் ரீமேக்குகளில் நடிக்க அதிகம் ஆர்வம் காண்பித்து வருகிறாராம்.

தெலுங்கில் ரீமேக் ஆகும் ‘என்னை அறிந்தால்’… நடிக்கப்போவது யார் தெரியுமா!?

மலையாளத்தில் ஹிட் ஆன ‘லூசிபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்க உள்ளார். தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்‘ திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆக இருப்பதாகவும் அதில் சிரஞ்சீவி நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தெலுங்கில் ரீமேக் ஆகும் ‘என்னை அறிந்தால்’… நடிக்கப்போவது யார் தெரியுமா!?

இந்த ரீமேக் பிரபாஸ் நடிப்பில் ‘சாஹோ’ படத்தை இயக்கிய சுஜீத் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ‘சாஹோ’ திரைப்படம் தோல்வி அடைந்ததும் சுஜீத்தின் சினிமா வாழ்க்கை அவ்வளவுதான் என்றவாறு பேசப்பட்டு வந்தது. ஆனாலும் சிரஞ்சீவி சுஜீத் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார். லூசிபர் தெலுங்கு ரீமேக்கிற்கு முதலில் சுஜீத்தைத் தான் சிரஞ்சீவி தேர்வு செய்ததாகக் கூறப்படுகிறது.

தற்போது ‘என்னை அறிந்தால்’ ரீமேக்கை இயக்க சுஜீத் சரியாக இருப்பார் என்று சிரஞ்சீவி விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. சிரஞ்சீவிக்காக கதையில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Share this story