புதையல் வேட்டைகாரனாக அசத்த வரும் யோகிபாபு!

புதையல் வேட்டைகாரனாக அசத்த வரும் யோகிபாபு!

நடிகர் யோகிபாபு ஒரு புதிய படத்தில் புதையல் வேட்டைக்காரராக நடிக்கவுள்ளார்.

ஜோதிகா நடிப்பில் வெளியான ராட்சசி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கவுதம் ராஜ். இவர் தற்போது வீரப்பனின் கஜானா என்ற நகைச்சுவை எடுக்கத் தயாராகி வருகிறார்.

ராஜேஷ், தேவா மற்றும் பூஜா ஆகியோர் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் படத்தில் யோகி பாபு மற்றும் மொட்டை ராஜேந்திரன் இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

புதையல் வேட்டைகாரனாக அசத்த வரும் யோகிபாபு!


“இந்த படம் அனைத்தும் காட்டில் அமைக்கப்பட்டுள்ளது மற்றும் ஒரு புதையலைத் தேடி வருபவர்களைச் சுற்றி கதை நகருகிறது. பொதுவாக, காடுகள் தான் புதையல் கொட்டிக் கிடக்கும் இடமாக அறியப்படுகிறது. காட்டுப் புதையல் என்ற ஒன்று பொதுவாக நாம் அனைவரும் அறிந்த ஒரு கருத்து. இந்தப் படம் அப்படிப்பட்ட படமாக இருக்கும்.” என்று இயக்குனர் தெரிவித்துள்ளார்.

யோகி பாபு இந்தப் படத்தில் புதையலைத் தேடி வருபவராக நடிக்கிறார். இதில் நடக்கும் குழப்பத்தில் சிக்கிக் கொள்ளும் நபராக மொட்டை ராஜேந்திரன் நடிக்கிறார். தற்போது இந்தப் படம் குற்றாலத்தில் படமாக்கப்பட்டு வருகிறது.

நாங்கள் சுமார் மூன்று-நான்கு மாதங்களுக்கு இந்தப் படத்தைத் துவங்கினோ. நாகர்கோயில், தென்காசி மற்றும் கலக்காடு ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். நிறைய கிராபிக்ஸ் வேலைகள் வேலைகள் உள்ளன, ஏனெனில் படத்தில் விலங்குகள் இடம் பெறுகின்றன.” என்றும் கவுதம் ராஜ் தெரிவித்துள்ளார்.

Share this story