கொரோனாவால் பலியான இளம் இயக்குனர்!

கொரோனாவால் பலியான இளம் இயக்குனர்!

குமார் வட்டி என்ற இளம் தெலுங்கு இயக்குனர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கூடவே பலி எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். திரைத்துறை பிரபலங்கள் சிலர் கூட கொரோனவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் பலியான இளம் இயக்குனர்!

தற்போது இளம் தெலுங்கு இயக்குனர் குமார் வட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இது டோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இயக்குனர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு டோலிவுட் திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share this story