×

10 கே.ஜி.எஃப் படங்களுக்கு நிகரானது ‘புஷ்பா’.. ‘உப்பன்னா’ இயக்குனர் புகாழாரம் !

10 கே.ஜி.எஃப் படங்களுக்கு நிகரானது ‘புஷ்பா’ என பிரபல இயக்குனர் புச்சி பாபு சேனா தெரிவித்துள்ளார். செம்மரக் கடத்தலை மையமாக வைத்து மிகவும் பிரம்மாண்ட உருவாகி வரும் திரைப்படம் ‘புஷ்பா’. நடிகர் அல்லு அர்ஜூன் அசத்தலான நடிப்பில் இப்படத்தை சுகுமார் இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் பஹத் பாசில் வில்லனாக நடித்து மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இவர்களுடன் கன்னட நடிகர் தனஞ்செயா, தெலுங்கு காமெடி நடிகர்
 

10 கே.ஜி.எஃப் படங்களுக்கு நிகரானது ‘புஷ்பா’ என பிரபல இயக்குனர் புச்சி பாபு சேனா தெரிவித்துள்ளார்.

செம்மரக் கடத்தலை மையமாக வைத்து மிகவும் பிரம்மாண்ட உருவாகி வரும் திரைப்படம் ‘புஷ்பா’. நடிகர் அல்லு அர்ஜூன் அசத்தலான நடிப்பில் இப்படத்தை சுகுமார் இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் பஹத் பாசில் வில்லனாக நடித்து மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

இவர்களுடன் கன்னட நடிகர் தனஞ்செயா, தெலுங்கு காமெடி நடிகர் சுனில் ஆகிய இருவரும் முக்கிய ரோலில் நடித்து வருகின்றனர். இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இப்படம், தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் ஃப்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. ரூபாய் 250 கோடியில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகத்தை வரும் ஆகஸ்ட் 13ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ‘புஷ்பா’ படத்தின் சுவாரஸ்சிய தகவல்களை ‘உப்பென்ன’ படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் புச்சி பாபு சேனா தெரிவித்துள்ளார். சமீபத்தில் இவர் கிளப் ஹவுஸ் மூலம் நண்பர்களிடம் உரையாடியுள்ளார். அப்போது பேசிய அவர், புஷ்பா படத்தின் முதல் பாகத்தை பார்த்துவிட்டேன். இந்த படம் கேஜிஎப் படத்தைவிட 10 மடங்கு பிரம்மாண்டமாக இருக்கும். இந்த படத்தில் அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளதாக கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.