×

கேரியர் முடிந்துவிட்டது என கூறிய தயாரிப்பாளருக்கு பதிலடி கொடுத்த 'சமந்தா'.

 

சமந்தாவின் திரை வாழ்கை முடிவுக்கு வந்துவிட்டது, அவர் ஸ்டார் நடிகை அந்தஸ்தை இழந்துவிட்டார் என கூறிய தயாரிப்பாளருக்கு தக்க பதிலடி கொடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் சமந்தா.

சகுந்தலம் படத்தின் தோல்வியை தொடந்து தெலுங்கில் பிரபல தயாரிப்பாளரான சிட்டி பாபு சமந்தா குறித்து கடுமையாக விமர்சித்தார் அதாவது, “விவாகரத்திற்கு பின்னர் தனது வாழ்வாதாரத்திற்காக  புஷ்பா படத்தில் ஐட்ட பாடலுக்கு நடனமாடிய சமந்தா, யசோதா படம் வெளியான சமயத்தில் புரொமோஷனில் கலந்துகொண்டு கண்ணீர் விட்டார், அதே  யுத்தியை சாகுந்தலம் படத்திற்கும் செய்தார் ஆனால் கைகொடுக்கவில்லை. சென்டிமென்ட் கை கொடுக்காது. சமந்தா ஸ்டார் ஹீரோயின்  அந்தஸ்தை இழந்துவிட்டார். கதாநாயகியாக அவரது கேரியர் முடிந்துவிட்டது. இனி எந்த மலிவான செயலும் எடுபடாது, கதையும், கதாப்பாத்திரமும் நன்றாக இருந்தால் மட்டுமே மக்கள் ரசிப்பார்கள்” என அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் சிட்டி பாபுவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சமந்தா இன்ஸ்டாகிராமில் ‘காதுகளில் முடி எப்படி வளரும்’ என கூகுளில் தேடி அதன் ஸ்க்கிரீன் ஷாட்டை பகிர்ந்துள்ளார். தயாரிப்பாளர் சிட்டி பாபுவுக்கு காதுகளில் முடி இருக்கும் அதனை குறிப்பிட்டுதான் அப்படி ஒரு பதிவை சமந்தா செய்துள்ளார்.