×

குத்து பாடலுக்கு 1 கோடி சம்பளம் கேட்கும் ஸ்ரேயா... அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள் !

 

பிரபல நடிகையான ஸ்ரேயா, குத்து பாடலுக்கு நடனமாட 1 கோடி ரூபாய் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ஸ்ரேயா, கடந்த 2003ம் ஆண்டு வெளியான எனக்கு ‘20 உனக்கு 18’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு ரஜினி, கமல், விக்ரம், விஜய் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களோடு நடித்துள்ளார். தமிழை தவிர தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். பல மொழிகளில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

திரைப் படங்களில் பிசியாக நடித்து வந்த ஸ்ரேயா கடந்த 2018 ஆம் ஆண்டு ஆண்ட்ரே கோஸ்சீவ் என்ற ரஷ்ய டென்னீஸ் வீரரை, காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு ராதா என்ற பெண் குழந்தையும் உள்ளது. இதையடுத்து நீண்ட நாட்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த ஸ்ரேயா, ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அதன்பிறகு ‘கப்ஜா’ படத்திலும் நடித்திருந்தார். 

தற்போது மீண்டும் திரைப்படங்களில் கம்பேக் கொடுக்கும் நினைக்கும் ஸ்ரேயா, தொடர்ந்து போட்டோஷூட்டுகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் புதிய படம் ஒன்றிற்காக குத்துப்பாடல் ஆட படக்குழுவினர் அவரை அணுகியுள்ளனர். அப்போது நடனமாட ஒரு கோடி ரூபாய் கேட்டுள்ளார். இதை கேட்ட அவர்கள் அதிர்ச்சியாகிவிட்டனர்.