×

திரையுலகில் தொடரும் சோகங்கள்… பிரபல வில்லன் நடிகர் மறைவு!

பிரபல மலையாள நடிகர் அனில் முரளி இன்று கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். சின்னத்திரையில் நடித்து வந்த அனில் முரளி, 1993- ல் வெளியான ‘கன்னியாகுமரியில் ஒரு கவிதா’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். தனது சினிமா வாழ்க்கையில் இதுவரை 200 படங்களுக்கு மேல் தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார். அனில் முரளி மிரட்டலான வில்லன் கதாபாத்திரங்களில் தான் அதிகம் நடித்துள்ளார். தமிழில் நிமிர்ந்து நில், தனி ஒருவன், கணிதன், அப்பா, கொடி, Mr.லோக்கல் நாடோடிகள்
 

பிரபல மலையாள நடிகர் அனில் முரளி இன்று கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
சின்னத்திரையில் நடித்து வந்த அனில் முரளி, 1993- ல் வெளியான ‘கன்னியாகுமரியில் ஒரு கவிதா’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். தனது சினிமா வாழ்க்கையில் இதுவரை 200 படங்களுக்கு மேல் தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார்.

அனில் முரளி மிரட்டலான வில்லன் கதாபாத்திரங்களில் தான் அதிகம் நடித்துள்ளார். தமிழில் நிமிர்ந்து நில், தனி ஒருவன், கணிதன், அப்பா, கொடி, Mr.லோக்கல் நாடோடிகள் 2, வால்டர் போன்ற படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
கல்லீரல் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது உயிரிழந்துள்ளார். அவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.