×

மீண்டும் வேலைக்குத் திரும்பிய கேஜிஃஎப் படக்குழு… விரைவில் படபிடிப்பு நிறைவு!

இந்த வருடத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் கேஜிஃஎப் 2-ம் ஒன்று. பிரசாந்த் நீல் இயக்கிவரும் இந்த படத்தில் சஞ்சய்தத் மற்றும் ரவீனா டாண்டன் ஆகிய பாலிவுட் பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஆதிராவாக நடிக்கும் சஞ்சய் தத்தின் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்தது. படப்பிடிப்பு பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சூழலில். கொரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன், ஒரு பிரம்மாண்டமான சண்டைக்காட்சியைப் படமாக்க ‘கே.ஜி.எஃப் 2’ படக்குழு முடிவு செய்துள்ளது. அதோடு
 

இந்த வருடத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் கேஜிஃஎப் 2-ம் ஒன்று. பிரசாந்த் நீல் இயக்கிவரும் இந்த படத்தில் சஞ்சய்தத் மற்றும் ரவீனா டாண்டன் ஆகிய பாலிவுட் பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஆதிராவாக நடிக்கும் சஞ்சய் தத்தின் போஸ்டர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்தது.

படப்பிடிப்பு பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சூழலில். கொரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன், ஒரு பிரம்மாண்டமான சண்டைக்காட்சியைப் படமாக்க ‘கே.ஜி.எஃப் 2’ படக்குழு முடிவு செய்துள்ளது. அதோடு ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்து விடுமாம்.

தற்போது கேஜிஃஎப் 2 தற்போது மீண்டும் படப்பிப்படிப்பை தொடங்கியுள்ளனர். சஞ்சய் தத் தனது பெரும்பாலான காட்சிகளில் நடித்துவிட்டாராம். இன்னும் மூன்று நாட்களின் படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளதாகக் கூறப்படுகிறது. நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சஞ்சய் சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு செல்ல இருக்கிறார். அவர் தனது மருத்துவ சிகிச்சைக்காக வேலையில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார்.

கேஜிஃஎப் படக்குழு செட்-ல் நடந்து செல்வது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டு படபிடிப்பு மீண்டும் துவங்கி விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இது குறித்து பதிவிட்ட படத்தின் இயக்குனர் பிரஷாந்த் நீல் “இதை முடித்துவிடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.