×

இதுக்கு நயன்தாரா தான் சரியா இருப்பார்… பரிந்துரை செய்த பிரபல நடிகர்!

நயன்தாரா மலையாளத்தில் நடித்து வந்த நிழல் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. நயன்தாரா மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபனுடன் ‘நிழல்’ படத்தில் நடித்து வந்தார். இந்தப் படத்தை கேரளா அரசின் மாநில விருது வென்ற எடிட்டர் என் பட்டாதிரி இயக்குகிறார். இப்படம் திரில்லர் ஜேர்னரில் உருவாகி வருகிறது. குஞ்சாக்கோ போபன் மற்றும் நயன்தாரா ஆகியோர் முன்பு ‘ட்வெண்டி -20’ படத்தில் ஒரு பாடலில் இணைந்து நடித்திருந்தனர். இரண்டாவது முறையாக நிழல் படத்திற்காக இணைந்துள்ளனர். தற்போது நிழல் படத்தின் படப்பிடிப்பு
 

நயன்தாரா மலையாளத்தில் நடித்து வந்த நிழல் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

நயன்தாரா மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபனுடன் ‘நிழல்’ படத்தில் நடித்து வந்தார். இந்தப் படத்தை கேரளா அரசின் மாநில விருது வென்ற எடிட்டர் என் பட்டாதிரி இயக்குகிறார்.

இப்படம் திரில்லர் ஜேர்னரில் உருவாகி வருகிறது. குஞ்சாக்கோ போபன் மற்றும் நயன்தாரா ஆகியோர் முன்பு ‘ட்வெண்டி -20’ படத்தில் ஒரு பாடலில் இணைந்து நடித்திருந்தனர். இரண்டாவது முறையாக நிழல் படத்திற்காக இணைந்துள்ளனர்.

தற்போது நிழல் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக படக்குழு தெரிவித்துள்ளனர். போன மாதம் தான் இப்படம் துவங்கப்பட்டது. இந்த மாதம் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது.

இப்படம் குறித்து பேசிய இயக்குனர் “படத்திற்கு ஒரு வலிமையான கதாநாயகி தேவை,. எனவே தான் நயன்தாரா இப்படத்தில் நுழைந்தார். இந்தக் கதாபாத்திரத்தை நயன்தாரா தான் எளிதில் செய்ய முடியும் என்பதால், நயன்தாராவை குஞ்சாக்கோ போபன் தான் எனக்கு பரிந்துரை செய்தார்” என்று இயக்குனர் தெரிவித்துள்ளார்.