×

11 வருடங்களுக்குப் பிறகு சூப்பர் ஹிட் இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் மகேஷ் பாபு!

டோலிவுட்டில் நடிகர் மகேஷ் பாபு இயக்குனர் த்ரிவிக்ரம் உடன் இணையும் மூன்றாவது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. டோலிவுட் ஸ்டார் மகேஷ் பாபு இயக்குனர் த்ரிவிக்ரம் சீனிவாஸ் உடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைக்கிறார். நேற்று அந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. ‘அத்தடு’ என்ற படத்தில் முதன்முறையாக இவர்கள் கூட்டணி இணைந்தனர். பின்னர் ‘கலீஜா’ படத்தில் இரண்டாவதாக இணைந்தனர். இரண்டு படமும் நல்ல வரவேற்பைப் பெற்றன. தற்போது 11 வருடங்கள் கழித்து மூன்றாவது முறையாக த்ரிவிக்ரம் உடன்
 

டோலிவுட்டில் நடிகர் மகேஷ் பாபு இயக்குனர் த்ரிவிக்ரம் உடன் இணையும் மூன்றாவது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டோலிவுட் ஸ்டார் மகேஷ் பாபு இயக்குனர் த்ரிவிக்ரம் சீனிவாஸ் உடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைக்கிறார். நேற்று அந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது.

‘அத்தடு’ என்ற படத்தில் முதன்முறையாக இவர்கள் கூட்டணி இணைந்தனர். பின்னர் ‘கலீஜா’ படத்தில் இரண்டாவதாக இணைந்தனர். இரண்டு படமும் நல்ல வரவேற்பைப் பெற்றன. தற்போது 11 வருடங்கள் கழித்து மூன்றாவது முறையாக த்ரிவிக்ரம் உடன் மகேஷ் பாபு இணைந்துள்ளார்.

ஹரிகா & ஹாசின் கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். நடிகை பூஜா ஹெக்டே இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. எஸ் தமன் இந்தப் படத்திற்கு இசையமைக்க உள்ளார். அடுத்த ஆண்டு கோடையில் இப்படம் ரிலீஸ் ஆகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.