×

ஆஸ்கருக்கு செல்லும் 2018 திரைப்படம்

 

ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பில் 2018 என்ற மலையாள படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான மலையாள திரைப்படம் ‘2018 எவேர்யோனே ஐஸ் எ ஹீரோ’. இந்தப் படத்தில் டோவினோ தாமஸ், ஆசிஃப் அலி, குஞ்சாகா போபன், வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லால், கலையரசன், நரேன் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

நோபின் பால் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 2018-ம் ஆண்டு கேரளா சந்தித்த பெருவெள்ளத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் படம் தமிழ், தெலுங்கில் டப் செய்யப்பட்டு  வெளியானது. உலகளவில் 200 கோடி ரூபாய்க்கும் அதிக வசூலைப் பெற்ற முதல் மலையாளப் படம் என்ற சாதனையையும் இந்தப் படம் பெற்றது. இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆஸ்கர் விருது விழாவுக்கு இந்தியா சார்பில் அனுப்ப 2018 திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.