×

பவர் ஸ்டார் படம் பவன் கல்யாணைப் பற்றியது இல்லை.. அப்படி இருந்தாலும் அது கற்பனையே.. – இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் சர்ச்சை பதிவு

சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா, இந்த கொரோனா ஊரடங்கு காலத்திலும் படங்களை இயக்கி தனது சொந்த இணையதளமான ஆர்.ஜி.வி. வோர்ல்டில் வெளியிட்டு வருகிறார். அதன்படி தெலுங்கில் தான் இயக்கி தயாரித்த ‘கிளைமேக்ஸ்’ திரைப்படத்தையும், அடுத்து ஒரு ஆபாச படமான நேக்டு படத்தையும் வெளியிட்டு நல்ல வசூல் பார்த்தார்.. அதற்கு அடுத்ததாக தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வரும், பவன் கல்யானைப் போலவே உருவம் கொண்ட ஒருவரை வைத்து ‘பவர் ஸ்டார்’ என்றொரு படத்தை இயக்கப்போவதாக
 

சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா, இந்த கொரோனா ஊரடங்கு காலத்திலும் படங்களை இயக்கி  தனது சொந்த இணையதளமான ஆர்.ஜி.வி. வோர்ல்டில் வெளியிட்டு வருகிறார். அதன்படி தெலுங்கில் தான் இயக்கி தயாரித்த ‘கிளைமேக்ஸ்’ திரைப்படத்தையும்,  அடுத்து ஒரு ஆபாச படமான நேக்டு படத்தையும் வெளியிட்டு நல்ல வசூல் பார்த்தார்..

அதற்கு அடுத்ததாக தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வரும், பவன் கல்யானைப் போலவே உருவம் கொண்ட ஒருவரை வைத்து ‘பவர் ஸ்டார்’ என்றொரு  படத்தை இயக்கப்போவதாக அறிவித்தார். இது தெலுங்குத் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதிலென்ன சர்ச்சை என்றால், முன்னணி நடிகரான பவன் கல்யான் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதிலிருந்தே பவன் கல்யாணைத் தொடர்ச்சியாகச் சீண்டி வந்தார் ராம் கோபால் வர்மா. மீண்டும் திரையுலகில் சில படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார் பவன் கல்யாண். அதையும் கிண்டல் செய்து சில ட்வீட்களை வெளியிட்டு வந்தார் ராம் கோபால் வர்மா.

இதனையடுத்தே பலரும் பவன் கல்யாணைக் கிண்டல் பண்ணுவதற்கே இந்தப் படத்தை இயக்குகிறார்  என்று கருத்து தெரிவித்தார்கள். மேலும் டோலிவுட்டில் பவன் கல்யாணை பவர் ஸ்டார் என்றும் அழைப்பார்கள். தற்போது  இதற்குப் பதிலளிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருக்கிறார்.
அதில் கூறியிருப்பதாவது:”என்னுடைய பவர் ஸ்டார் படம் யாருடைய வாழ்க்கை வரலாறும் அல்ல. ஆனால் அது தேர்தலில் தோல்வியைச் சந்தித்த ஒரு நடிகரின் பிந்தைய நாட்களைப் பற்றிய ஒரு கற்பனைக் கதை. அது உயிருடன் உள்ள யாரையேனும் பற்றியதுபோல இருந்தால் அது முழுக்க தற்செயலானதே.. பவர் ஸ்டார் படம் பவன் கல்யாணைப் பற்றியது என்று ஊடகங்களில் வரும் செய்திகள் தவறானவை மட்டுமல்ல பொறுப்பற்றவையும் கூட”.என்று தெரிவித்துள்ளார்..