×

5 வருடங்களுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட மலர் டீச்சரும், மேரியும்!

நடிகை சாய் பல்லவியும் அனுபமா பரமேஷ்வரனும் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றன. கடந்த 2015-ம் ஆண்டு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோன்னா செபாஸ்டின் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான பிரேமம் படம் வரலாறு காணாத வெற்றி அடைந்தது. சென்னையிலும் கூட அந்தப் படம் நூறு நாட்கள் ஓடி அசத்தியது.பிரேமம் படம் வெளியான போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஒரு புதிய ட்ரெண்டை
 

நடிகை சாய் பல்லவியும் அனுபமா பரமேஷ்வரனும் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றன.

கடந்த 2015-ம் ஆண்டு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோன்னா செபாஸ்டின் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான பிரேமம் படம் வரலாறு காணாத வெற்றி அடைந்தது. சென்னையிலும் கூட அந்தப் படம் நூறு நாட்கள் ஓடி அசத்தியது.
பிரேமம் படம் வெளியான போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஒரு புதிய ட்ரெண்டை உருவாக்கியது. அதை டிரென்ட் செட்டர் படம் என்று கூட கூறலாம்.


கதாநாயகனுக்கு மூன்று பருவங்களில் வரும் காதலை யதார்த்தமாகவும் வாழ்வின் அழகியலோடும் காட்சி படுத்தி இருந்தார் அல்போன்ஸ் புத்திரன்.
பிரேமம் படத்தில் நடித்திருந்த மூன்று நடிகைகளில் யாரை மிகவும் பிடிக்கும் என்று கேட்டால் பெரும்பாலானோர் கூறும் பதில் மலர் டீச்சர்தான். படம் வெளியாகி ஐந்து வருடங்களுக்கு மேலாகியும் மலர் டீச்சர் நினைவு மட்டும் நம்மிடமிருந்து நீங்க மறுக்கிறது.

அதற்கு அடுத்தபடியாக அனுபமா பரமேஸ்வரன் தான். அறிமுகமான முதல் படத்திலேயே தனக்கென்று தனி இடத்தை உருவாக்கிவிட்டார். பள்ளி மாணவியாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.


பிரேமம் படத்திற்குப் பிறகுதான் சாய் பல்லவி அனுபமா பரமேஸ்வரன் இருவருக்கும் அவர்களின் சினிமா என்ற கனவு பலித்தது என்று கூட சொல்லலாம். அதனால்தான் அனுபமா தனது இல்லத்திற்கு பிரேமம் இல்லம் என்று பெயர் வைத்திருக்கிறார்.

தற்போது மலரும்(சாய் பல்லவி) மேரியும்(அனுபமா) சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றன.