×

ஆணவக் கொலையை படமாக எடுக்க இருந்த பிரபல இயக்குனர் மீது வழக்கு பதிவு!

கவுரவக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அடிப்படையில் ‘மர்டர்’ என்றொரு படம் எடுக்கப்போவதாக இயக்குனர் ராம் கோபால் வர்மா அறிவித்திருந்தார். இதையடுத்து. ‘மர்டர்’ படம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவுப்படி ராம் கோபால் வர்மா மீது தெலுங்கானா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இயக்குனர் மீதும் தயாரிப்பாளர் மீதும் இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் பாலசாமி என்பவர் படத்தை தடை செய்யக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த்திருந்தார். மேலும் தனது
 

கவுரவக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அடிப்படையில் ‘மர்டர்’ என்றொரு படம் எடுக்கப்போவதாக இயக்குனர் ராம் கோபால் வர்மா அறிவித்திருந்தார். இதையடுத்து. ‘மர்டர்’  படம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவுப்படி ராம் கோபால் வர்மா மீது தெலுங்கானா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இயக்குனர் மீதும் தயாரிப்பாளர் மீதும் இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் பாலசாமி என்பவர் படத்தை தடை செய்யக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்த்திருந்தார். மேலும் தனது மகன் பிராணய் மற்றும் அவரது மருமகள் அம்ருதாவின் புகைப்படங்கள் தங்களின் அனுமதியின்றி பயன்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.
 

பிரணய் (24)  என்ற தலித் பிரிவைச் சேர்ந்த இளைஞர், உயர்வகுப்பைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண்ணை திருமணம் செய்தார். பிரணாய், மனைவி அம்ருதா மற்றும் தாயுடன் சேர்ந்து செப்டம்பர் 14, 2018 அன்று மிரியாலகுடாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்துகொண்டிருந்தபோது, ​​கூலிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார்.