×

“இன்கிம் இன்கிம் …. இடுப்பழகிக்கு 2 கோடி சம்பளம் வேண்டுமாம் !

கிரிக் பார்ட்டி என்கிற கன்னட படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ரஷ்மிகா மந்தனா. தனது வெளிப்படையான பேச்சால் ரசிகர்கள் பலரின் மனதை கட்டி இழுத்துக்கொண்ட இவர் தெலுங்கு மொழிபடங்களிலும் பயணத்தை தொடர்ந்தார். தற்போது தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் ரஷ்மிகா .தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் சேர்ந்து சரிலேரு நீக்கெவரு என்ற படத்தில் நடித்தார்.இந்த படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி பயங்கர ஹிட்டானது. இதையடுத்து இவர் அல்லு அர்ஜுனின் புஷ்பா
 

கிரிக் பார்ட்டி என்கிற கன்னட படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ரஷ்மிகா மந்தனா.

தனது வெளிப்படையான பேச்சால் ரசிகர்கள் பலரின் மனதை கட்டி இழுத்துக்கொண்ட இவர் தெலுங்கு மொழிபடங்களிலும் பயணத்தை தொடர்ந்தார்.

தற்போது தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் ரஷ்மிகா .தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் சேர்ந்து சரிலேரு நீக்கெவரு என்ற படத்தில் நடித்தார்.இந்த படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி பயங்கர ஹிட்டானது. இதையடுத்து இவர் அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் தமிழிலும் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அடியெடுத்துவைக்கிறார்.

ரஷ்மிகா என்னதான் பலமொழி படங்களில் நடித்தாலும் ரசிகர்களுக்கு நினைவில் வருவது என்னவோ இவர் இடுப்பை காட்டி வரும் “இன்கிம் இன்கிம் இன்கிம் காவாளே…..” பாடல் தான்.

இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் பயங்கர ஹிட் ஆவதால் அம்மணிக்கு தற்போது சம்பளம் போதவில்லையாம் .அதனால் இதுவரை ரூ. 1 கோடி சம்பளம் வாங்கி கொண்டிருந்த ரஷ்மிகா தற்போது ரூ. 2 கோடி கேட்பதாக தெலுங்கு மீடியாக்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஆண்டு ரூ. 60 லட்சம் முதல் ரூ. 80 லட்சம் வரை சம்பளம் வாங்கி வந்த ரஷ்மிகா தற்போது ரூ. 2 கோடி வாங்குகிறாராம்.

கொரானா காலகட்டத்தில் படங்கள் ரிலீஸ் ஆவதே ப்ரம்ம ப்ரயத்தனமாக இருக்கும் இந்த சூழலில் ரஷ்மிகா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளது இயக்குனர்களை கடுப்படைய செய்துள்ளது.