×

பவன் கல்யாணை அடுத்து மகேஷ் பாபுவை குறிவைத்த பிரபல இயக்குனர்!

தெலுங்கு இயக்குனர் ராம்குமார் ராம்கோபால் வர்மா இயக்கும் படங்கள் எப்போதுமே சர்ச்சைகள் கொண்டவைதான். பிரபல தெலுங்கு நடிகர் மற்றும் ஜனதா கட்சியின் தலைவர் பவன் கல்யாணின் வாழ்க்கையை படமாக எடுக்க போவதாக அறிவித்திருந்தார். மேலும் பாலகிருஷ்ணா மற்றும் பெல்லம்கொண்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து மற்றுமொரு படம் எடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகின. தற்போது ராம்கோபால் வர்மா தெலுங்கு ஸ்டார் மகேஷ் பாபுவை குறி வைத்துள்ளதாக தெரிகிறது. இதற்கு முன்னரே ராம்கோ முன்வருமா மகேஷ்பாபுக்கு எதிராக கருத்துக்கள் தெரிவித்துள்ளார்.
 

தெலுங்கு இயக்குனர் ராம்குமார் ராம்கோபால் வர்மா இயக்கும் படங்கள் எப்போதுமே சர்ச்சைகள் கொண்டவைதான். பிரபல தெலுங்கு நடிகர் மற்றும் ஜனதா கட்சியின் தலைவர் பவன் கல்யாணின் வாழ்க்கையை படமாக எடுக்க போவதாக அறிவித்திருந்தார். மேலும் பாலகிருஷ்ணா மற்றும் பெல்லம்கொண்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து மற்றுமொரு படம் எடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகின.

தற்போது ராம்கோபால் வர்மா தெலுங்கு ஸ்டார் மகேஷ் பாபுவை குறி வைத்துள்ளதாக தெரிகிறது.
இதற்கு முன்னரே ராம்கோ முன்வருமா மகேஷ்பாபுக்கு எதிராக கருத்துக்கள் தெரிவித்துள்ளார். 2017-ம் ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது மகேஷ்பாபு ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு அளித்து கருத்து தெரிவித்தார்.

“ஆந்திராவில் நடக்கும் வாழ்க்கை போராட்டங்களைக் கருத்தில் கொள்ளாமல் தமிழ்நாட்டு கலாச்சாரங்களுக்கு மகேஷ் பாபு ஆதரவு அளித்து வருகிறார்” என்று கருத்து தெரிவித்திருந்தார். மேலும் ஆந்திராவின் மக்களை மகேஷ்பாபு அவ்வளவாக கண்டுகொள்வதில்லை என்றும் சாடியிருந்தார். தற்போது மகேஷ் பாபுவைப் பற்றி அவர் படம் எடுக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.