கிளைமேக்ஸ் ஷூட்டிங்கில் ‘ஆர்.ஆர்.ஆர்’ – பிரம்மாண்ட இயக்குனரின் ட்வீட்…
ஆர்.ஆர்.ஆர் படத்தின் கிளைமேக்ஸ் ஷூட்டிங் தொடங்குவதாக பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி ட்வீட் செய்துள்ளார்.
உலகையே இந்திய சினிமாவை நோக்கி பார்க்க வைத்தவர் ராஜமௌலி. பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் இவர், பாகுபலி என்ற படத்தை இரண்டு பாகங்களாக எடுத்தார். மாபெரும் வெற்றிப் பெற்ற இப்படம் உலகம் முழுவதும் வசூலை வாரி குவித்தது.
இதையடுத்து அவர் பிரம்மாண்டமாக இயக்கி வரும் படம் ஆர்.ஆர்.ஆர். ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆலியா பட், சமுத்திரகனி, தேவ் கான் என பெரிய பட்டாளமே நடிக்கிறது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் கொரானாவால் நிறுத்தப்பட்டது.
இந்த படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், விரைவில் கிளைமேக்ஸ் ஷூட்டிங் துவங்க இருப்பதாக, புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ராஜமௌலி. அந்த புகைப்படத்தில் ராமராஜு மற்றும் பீம் மட்டும் கைகளை காட்டும் விதமாக அமைந்துள்ளது. இந்த படம் விரைவில் திரைக்கு வருவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.