×

விஜய் தேவரகொண்டாவுக்கு அப்பாவாகிய சுரேஷ் கோபி !

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை திருடிய விஜய் தேவரகொண்டா தற்போது இயக்குனர் பூரி ஜெகநாத்துடன் ஒரு படத்தில் ஒப்பந்தமாகி பிஸியாக உள்ளார். ”ஃபைட்டர்” என பெயரிடப்பட்ட இப்படத்தில் விஜய் ஒரு குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார்.இதனால் தனது உடல் இடையை பிட் ஆக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார் அவர். இப்படத்தில் விஜய்யின் தந்தை கதாபாத்திரத்தில் மலையாள முன்னணி நடிகர் சுரேஷ் கோபி நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம் தந்தை-மகனுக்கிடையே உள்ள உணர்வை வெளிப்படுத்தும் விதமாக
 

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை திருடிய விஜய் தேவரகொண்டா தற்போது இயக்குனர் பூரி ஜெகநாத்துடன் ஒரு படத்தில் ஒப்பந்தமாகி பிஸியாக உள்ளார். ”ஃபைட்டர்” என பெயரிடப்பட்ட இப்படத்தில் விஜய் ஒரு குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார்.இதனால் தனது உடல் இடையை பிட் ஆக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார் அவர்.

இப்படத்தில் விஜய்யின் தந்தை கதாபாத்திரத்தில் மலையாள முன்னணி நடிகர் சுரேஷ் கோபி நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம் தந்தை-மகனுக்கிடையே உள்ள உணர்வை வெளிப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட தமிழில் வெளியான எம் குமரன் சன் ஆப் மஹாலக்ஷ்மி படத்தின் கதையை போன்று இருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் நடிகர் சுரேஷ் கோபியின் டப்பிங் திரைப்படங்கள் தெலுங்கு மாநிலங்களில் வெளியாகி உள்ளதால் அவர் தான் இந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என தயாரிப்பாளர்கள் அவரை தேர்தெடுத்துள்ளனர்.

மலையாளத்தில் ஒரு மாஸ் ஹீரோவாக இருக்கும் சுரேஷ் கோபி சமீப காலமாக படங்களில் நடிக்காமல் இருந்தார்.இந்நிலையில் அவர் மீண்டும் நடிக்க தொடங்கி உள்ளது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா இப்படத்திற்கு பலம் என்றால் சுரேஷ் கோபி அப்பாவாக நடித்துள்ளது படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் என்றே சொல்லலாம்.