கால்நடை மருத்துவர் கொலையில் கோடிகளை கொட்ட திட்டமிடும் ராம்கோபால் வர்மா-கற்பழிப்பை காசாக்க படமெடுக்கிறார்…
ஹைதராபாத்தில் நடந்த திஷா கற்பழிப்பு குறித்து ,ராம் கோபால் வர்மா ஒரு சமூக படமெடுப்பதாக அறிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு,அங்கு ஒரு இளம் பெண் (ஒரு டாக்டராக இருந்தவர்) நான்கு மிருகத்தனமான ஆண்களால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டார். சில நாட்களுக்குப் பிறகு, காவல்துறையால் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஹைதராபாத்தில் நடந்த திஷா கற்பழிப்பு குறித்து ,ராம் கோபால் வர்மா ஒரு சமூக படமெடுப்பதாக அறிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு,அங்கு ஒரு இளம் பெண் (ஒரு டாக்டராக இருந்தவர்) நான்கு மிருகத்தனமான ஆண்களால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டார். சில நாட்களுக்குப் பிறகு, காவல்துறையால் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தை வைத்து பேசிய வர்மா “எனது அடுத்த படத்திற்கு ‘திஷா’ என்று பெயரிடப்பட்டுள்ளேன் , அது திஷா கற்பழிப்பு பற்றியது. நிர்பயாவின் கொடூரமான கொலைக்குப் பிறகு (2012 ல், டெல்லியில்), திஷாவை கற்பழித்து எரித்ததன் மூலம் தங்கள் கொடூர முகத்தை சமூகத்துக்கு குற்றவாளிகள் வெளிக்காட்டினர். அந்த கற்பழிப்பாளர்களின் சிந்தனையையும் , செயல்முறையையும் ,மேலும் அவர்கள் ஏன் கொன்றார்கள் என்பது பற்றி எனது படம் விவரிக்கும்”. என்று இன்று கூறினார்.