×

இவரு உதவிக்கு ஒரு அளவே இல்லையா… மாஸ்கோவில் சிக்கிய தமிழக மாணவர்களை தனி விமானம் மூலம் சென்னை அழைத்து வந்த சோனு சூட்!

திரைப்படங்களில் வில்லனாக மட்டுமே பார்க்கப்பட்டு வந்தவர் நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக மாறிய தருணம் அது. கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி வாழ்வாதாரம் இழந்து நம்பிக்கை அற்று கண்ணீருடன் நின்ற ஏழைகளின் முன் தன்னுடைய உதவிகள் மூலம் கடவுளாகத் தென்பட்டார் சோனு சூத். ஊரடங்கால் சொந்த ஊர் செல்ல முடியாமல் சிக்கிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர்கள் சொந்த ஊர் செல்ல வசதி ஏற்படுத்தி கொடுத்து உணவு தங்கும் வசதி ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார். தன் மகள்களை வைத்து வயலை
 

திரைப்படங்களில் வில்லனாக மட்டுமே பார்க்கப்பட்டு வந்தவர் நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக மாறிய தருணம் அது. கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி வாழ்வாதாரம் இழந்து நம்பிக்கை அற்று கண்ணீருடன் நின்ற ஏழைகளின் முன் தன்னுடைய உதவிகள் மூலம் கடவுளாகத் தென்பட்டார் சோனு சூத்.

ஊரடங்கால் சொந்த ஊர் செல்ல முடியாமல் சிக்கிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவர்கள் சொந்த ஊர் செல்ல வசதி ஏற்படுத்தி கொடுத்து உணவு தங்கும் வசதி ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார். தன் மகள்களை வைத்து வயலை உழுத ஆந்திர விவசாயிக்கு உடனே டிராக்டர் வாங்கி கொடுத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

வாழ்வாதாரம் இழந்து ரோட்டில் சிலம்பம் சுற்றி உதவி கேட்ட மூதாட்டிக்கு தற்காப்பு கலை பயிற்சி பள்ளி ஆரம்பித்து கொடுப்பதாக உறுதியளித்தார். இதற்கெல்லாம் மேலாக தனது பிறந்த நாள் பரிசாக வேலையில்லாத மூன்று லட்சம் பேருக்கு பல நிறுவனகளின் உதவியுடன் வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவதாக அறிவித்தார். பின்னர் ஆதரவற்ற 3 குழந்தைகளை தத்தெடுத்தார். இன்னும் லிஸ்ட் கொண்டே தான் போகிறது.

இதையடுத்து, தற்போது கொரோனாவால் மாஸ்கோவில் சிக்கியிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 90-க்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ் பட்டதாரி மாணவர்கள் இந்தியா திரும்ப சோனு சூத் ஒரு விமானத்தை ஏற்பாடு செய்துள்ளார். ஜூலை மாதம் ஆரம்பத்திலிருந்து மாஸ்கோ-இந்தியா விமான சேவை இல்லாமல் இருந்தது. அந்த மாணவர்கள் அதிக பேரிடம் உதவியை நாடினார்கள். அவர்களில் சோனுவும் ஒருவர். ஆகஸ்ட் 4 ஆம் தேதி உதவி கோரிய அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக தனி விமானம் ஒன்றை ஏற்பாடு செய்தார். தற்போது மாணவர்கள் அனைவரும் இன்று பாதுகாப்பாக சென்னைக்குத் திரும்பினர். அனைத்து மாணவர்களும் சோனு சூட்டிற்கு மனதார நன்றி தெரிவித்தனர்.