×

நான் தற்கொலை செய்துகொள்வேன்.. பிரபல நடிகையின் பதிவால் சர்ச்சை…

போஜ்புரி நடிகையான ராணி சாட்டர்ஜி 2003ம் ஆண்டு வெளியான சசுரா படா பைசாவாலா படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். இந்திய ஸ்டண்ட் ரியாலிட்டி தொலைக்காட்சி தொடரான கத்ரான் கே கிலாடியில் தோன்றியதன் மூலம் இந்திய அளவில் பாப்புலரானார். கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட போஜ்புரி படங்களில் நடித்துள்ள ராணி சாட்டர்ஜி, எம் எக்ஸ் ப்ளேயரில் ஒளிபரப்பான ‘மஸ்த்ராம்’ வெப்சீரிஸில் படு கவர்ச்சி காட்டி பருப்பு விற்கும் பெண்ணாக நடித்திருப்பார். தற்போது இவர், சமூக வலைதளத்தில் ஒருவர் தொடர்ந்து தொந்தரவு
 

போஜ்புரி நடிகையான ராணி சாட்டர்ஜி 2003ம் ஆண்டு வெளியான சசுரா படா பைசாவாலா படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். இந்திய ஸ்டண்ட் ரியாலிட்டி தொலைக்காட்சி தொடரான கத்ரான் கே கிலாடியில் தோன்றியதன் மூலம் இந்திய அளவில் பாப்புலரானார். கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட போஜ்புரி படங்களில் நடித்துள்ள ராணி சாட்டர்ஜி, எம் எக்ஸ் ப்ளேயரில் ஒளிபரப்பான ‘மஸ்த்ராம்’  வெப்சீரிஸில் படு கவர்ச்சி காட்டி பருப்பு விற்கும் பெண்ணாக நடித்திருப்பார்.

தற்போது இவர், சமூக வலைதளத்தில் ஒருவர் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருவதாகவும், அதற்கு முடிவு கிடைக்காத பட்சத்தில் தற்கொலை செய்துகொள்வேன் என்றும் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.. இதுகுறித்து  தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில், நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்..
அதில், “ ’தனஞ்சய் சிங்’ என்னும் நபரைக் குறிப்பிட்டு.., அவர் நீண்ட காலமாக தனக்கு தொந்தரவு கொடுத்து வருவதாகவும், உடல் ரீதியாக மோசமான சொற்களைப் பயன்படுத்தி அழைப்பதாவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதனால் மிகுந்த மனச்சோர்வு அடைந்துள்ளதாகவும். இனியும் என்னால் இந்தப் பிரச்னையை கையாள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

அந்த நபர் பல ஆண்டுகளாகவே முகநூலில் இதுபோன்று ஆபாசமாக எழுதி வருகிறார் எனவும், அதை தான் இதுவரை புறக்கணித்து வந்ததாகவும்.. ஆனால் இனியும் என்னால் சகித்துக்கொள்ள முடியாது, அந்த அளவிற்கு எனக்கு பலம் இல்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இதனால் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும், இதே நிலை தொடர்ந்தல் தற்கொலை செய்துகொள்வேன் என்றும் இன்ஸ்டகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்..

தான் அப்படி ஒரு முடிவு எடுத்தால், அதற்கு தனஜ்சய் சிங் என்னும் அந்த நபர்தான் காரணம் என்றும்  மும்பை காவல்துறையை டேக் செய்து பதிவிட்டிருக்கிறார்.. இதுகுறித்து சைபர் கிரைமில் புகார் அளித்திருந்தும், தனஞ்சய் ராணி சாட்டர்ஜியுன் பெயரைக் குறிப்பிடாமல் பதிவுகள் போடுவதால் நடவடிக்கை எடுக்க முடியாது என கூறிவிட்டதாகவும்  அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.  முன்னதாக இதுபோன்று பார்வதி, இலியானா, ஸ்ரேயா சரன் ஆகியோரும் ரசிகர்களிடமிருந்து வரும் மோசமான பதிவுகள் குறித்து புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது..