×

இங்கு எல்லாரும் பணம், புகழைத் தேடி தான் ஓடிக் கொண்டிருக்கின்றனர்… பிரபல பாலிவுட் நடிகர் ஓபன் டாக்!

திரைத்துறையில் எல்லோரும் பணம் அல்லது புகழைத் தேடி தான் ஓடிக் கொண்டிருக்கின்றனர் என்று பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் பேசியிருப்பது சமூக ஊடகங்களில் பேசு பொருளாகியுள்ளது. பாலிவுட் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் அஜய் தேவ்கன். இவர் தற்போது ராஜமௌலி இயக்கத்தில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட அஜய் தேவ்கன் இங்கு எல்லோரும் பணம் இல்லையென்றால் புகழைத் தேடி தான் ஓடிக்கொண்டிருக்கின்றனர். எந்தவொரு நடிகரும் தனது திரைப்படங்களின்
 

திரைத்துறையில் எல்லோரும் பணம் அல்லது புகழைத் தேடி தான் ஓடிக் கொண்டிருக்கின்றனர் என்று பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் பேசியிருப்பது சமூக ஊடகங்களில் பேசு பொருளாகியுள்ளது.

பாலிவுட் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் அஜய் தேவ்கன். இவர் தற்போது ராஜமௌலி இயக்கத்தில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட அஜய் தேவ்கன் இங்கு எல்லோரும் பணம் இல்லையென்றால் புகழைத் தேடி தான் ஓடிக்கொண்டிருக்கின்றனர்.

எந்தவொரு நடிகரும் தனது திரைப்படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தனக்கு கவலையில்லை என்று சொன்னால், நிச்சயமாக அவர் பொய் சொல்கிறார். ஒவ்வொரு நடிகரும் பாக்ஸ் ஆபிஸ் வசூலை விரும்புகிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

அஜய் தேவ்கன், ‘மைதான்’ என்ற படத்தில் கால்பந்து பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹீம் வேடத்தில் நடித்துள்ளார். இப்படமும், ஆர்ஆர்ஆர் திரைப்படமும் அக்டோபர் 13-ம் தேதி வெளியாகி பாக்ஸ் ஆபிசில் மோதல் செய்யவிருப்பது குறிப்பிடத்தக்கது.