×

ராவணன் குறித்து கருத்து கூறியதால் நடிகர் சைஃப் அலிகான் மீது வழக்கு..

இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாக உள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’. ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்படும் இந்தப் படத்தில் ராமராக பிரபாஸ் நடிக்க, ராவணனாக சைஃப் அலி கான் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு(2021) ஜனவரியில் படப்பிடிப்பைத் தொடங்கி, ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது. அதோடு 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிடவும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த
 

இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாக உள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’. ராமாயணத்தைத் தழுவி எடுக்கப்படும் இந்தப் படத்தில் ராமராக பிரபாஸ் நடிக்க, ராவணனாக சைஃப் அலி கான் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

அடுத்த ஆண்டு(2021) ஜனவரியில் படப்பிடிப்பைத் தொடங்கி, ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது. அதோடு 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிடவும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் செய்தி நிறுவனத்துக்கு ரவணனாக நடிக்கும் சைஃப் அலி கான் பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில் ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் ராவணனின் நல்ல பக்கத்தை காட்டும் என்று குறிப்பிட்டிருந்தார். சைஃப் அலி கானின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து தனது கருத்துக்கு சைஃப் அலி கான் மன்னிப்பும் கோரினார்.

இந்நிலையில் வழக்கறிஞர் ஹிமான்ஷு ஸ்ரீவத்சவா என்பவர் சைஃப் அலி கான் மீது உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் அவர் சைஃப் அலி கான் இந்துக்களின் நம்பிக்கைக்கு எதிராக பேசியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு வரும் 23ஆம் தேதி அன்று விசாரணைக்கு வருகிறது.