×

நான் சொன்னதைச் செய்யலனா அவர கூட்டிட்டு ஓடிப் போயிருவேன்… விடாப்பிடியாக இருந்து சாதித்த பிரபல நடிகை!

நடிகை கரீனா கபூர் இந்திய சினிமாவின் மிகவும் முக்கியமான மற்றும் பிரபலமான நடிகை. பாலிவுட்டின் அனைத்து முன்னணி கதாநாயர்களோடும் கரீனா நடித்துவிட்டார். இவர் நடிகர் சைப் அலி கானை 2012-ம் ஆண்டு இதே நாள் காதல் திருமணம் செய்து கொண்டார். கரீனா- சைப் ஜோடிக்கு தைமூர் என்ற மகன் உள்ளார். கரீனா தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். சைப் அலி கானுக்கு அம்ரிதா சிங் என்பவருடன் திருமணம் ஆகி இருந்தது. பின்னர் இருவரும் பிரிந்துவிட்டனர். அவர்களுக்கு
 

நடிகை கரீனா கபூர் இந்திய சினிமாவின் மிகவும் முக்கியமான மற்றும் பிரபலமான நடிகை. பாலிவுட்டின் அனைத்து முன்னணி கதாநாயர்களோடும் கரீனா நடித்துவிட்டார். இவர் நடிகர் சைப் அலி கானை 2012-ம் ஆண்டு இதே நாள் காதல் திருமணம் செய்து கொண்டார். கரீனா- சைப் ஜோடிக்கு தைமூர் என்ற மகன் உள்ளார். கரீனா தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார்.

சைப் அலி கானுக்கு அம்ரிதா சிங் என்பவருடன் திருமணம் ஆகி இருந்தது. பின்னர் இருவரும் பிரிந்துவிட்டனர். அவர்களுக்கு சாரா என்ற மக்களும், இப்ராஹிம் என்ற மகனும் உள்ளனர்.

இன்று கரீனா-சைப் அலி கான் ஜோடி தங்களது திருமண நாளைக் கொண்டாடுகின்றனர். அதையடுத்து பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இந்த ஜோடிக்கு திருமண நாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இவர்கள் திருமணத்தில் நடந்த சில சுவாரசியமான நிகழ்வுகள் பற்றியும் தெரிய வந்துள்ளது.

கரீனா தனது காதலை குடும்பத்தினரிடம் வெளிப்படுத்தியதும் அவர்கள் உடனே ஒப்புக்கொண்டுள்ளார்கள். கரீனாவின் திருமணத்தை பிரமாண்டமாக நடத்தவேண்டும் என்றனர். ஆனால் கரீனாவோ திருமணம் எளிமையாக இருக்கவேண்டும் என்றார். குடும்பத்தினர் பிரமாண்டமாக நடத்தவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தனர். கரீனாவும் விட்டபாடில்லை. தான் சொன்னது நடக்காவிட்டால் சைப் அலி கானை கூட்டிச் சென்று லண்டனில் வைத்து திருமணம் செய்து கொள்வேன் என்றுள்ளார்.

அதையடுத்து அவர்கள் பெற்றோர்கள் கரீனாவின் திருமணத்தை எளிமையாக நடத்தியுள்ளனர். தற்போது கரீனா அமீர் கானின் லால் சிங் சத்தா படத்தில் நடித்து வருகிறார். கர்ப்பமாக இருப்பினும் அந்தப் படப்பிடிப்பில் கலந்து வருகிறார்.