×

கரீனாவும் மகன் தைமூரும் செய்யும் பானை !

பாலிவுட்டில் ஜொலிக்கும் நட்சத்திரமான நடிகை கரீனா கபூர் நடிகர் சயிப் அலி கானை காதலித்து கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ம் தேதி திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தைரமூர் அலி கான் என்கிற மகன் இருக்கிறார். கரீனா தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். கரீனா கபூர் நடிகர் சயிப் அலி கானின் இரண்டாவது மனைவி ஆவார். சயிப் அலி கானுக்கு தனது முதல் மனைவியுடன் சாரா அலி கான் என்கிற மகளும், இப்ராஹிம்
 

பாலிவுட்டில் ஜொலிக்கும் நட்சத்திரமான நடிகை கரீனா கபூர் நடிகர் சயிப் அலி கானை காதலித்து கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ம் தேதி திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தைரமூர் அலி கான் என்கிற மகன் இருக்கிறார். கரீனா தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார்.

கரீனா கபூர் நடிகர் சயிப் அலி கானின் இரண்டாவது மனைவி ஆவார். சயிப் அலி கானுக்கு தனது முதல் மனைவியுடன் சாரா அலி கான் என்கிற மகளும், இப்ராஹிம் என்கிற மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில் தனது முதல் மனைவியை பிரிந்த பிறகே சயிப் அலி கான் கரீனாவை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது தனது விடுமுறையை தர்மசாலாவில் கழித்து வரும் நடிகை கரீனா தனது மகன் தைமூர் அலி கானுக்கு ஓவியம் வரைதல், தோட்டக்கலை போன்ற அனைத்தும் கற்றுக்கொடுத்து அவற்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். கர்ப்பிணியாக இருக்கும் கரீனா தனது முதல் குழந்தையுடன் விளையாடுவது பார்ப்பதற்கே அழகாக உள்ளது.இருவரும் சேர்ந்து பானை வடிவமைக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.