×

கற்பழிப்பு வழக்கில் சிக்கிய பிரபல நடிகரின் மகன் மற்றும் மனைவி!

பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தியின் மனைவியும் மகனும் பெண் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சட்டப்பட்டுள்ளனர். நடிகர் மிதுன் சக்ரவர்த்தியின் மகன் மகா அக்ஷய் மற்றும் அவரது மனைவி யோகீதா ஆகியோரின் மேல் பெண்ணை வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து அவர்கள் மீது எப்.ஐ.ஆர் தாக்கல் செய்யப்பட்டது. ஒரு நடிகையுடன் நடிகை மகா அக்ஷய் உடன் 2015-ம் ஆண்டு முதலே உறவில் இருந்து வந்துள்ளார். அக்ஷய் தனக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து
 

பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தியின் மனைவியும் மகனும் பெண் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சட்டப்பட்டுள்ளனர்.

நடிகர் மிதுன் சக்ரவர்த்தியின் மகன் மகா அக்ஷய் மற்றும் அவரது மனைவி யோகீதா ஆகியோரின் மேல் பெண்ணை வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து அவர்கள் மீது எப்.ஐ.ஆர் தாக்கல் செய்யப்பட்டது.

ஒரு நடிகையுடன் நடிகை மகா அக்ஷய் உடன் 2015-ம் ஆண்டு முதலே உறவில் இருந்து வந்துள்ளார். அக்ஷய் தனக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து பின்னர் தன் அனுமதி இல்லாமல் பாலியல் வன்புணர்வு செய்ததாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார். பின்னர் அவர் கர்ப்பமடைந்துள்ளார். கருக்கலைப்பு செய்ய மகா அக்ஷய் அந்தப் பெண்ணை வற்புறுத்தியுள்ளார். அவர் அதற்கு சம்மதிக்காததால் சில மாத்திரைகள் கொடுத்து அந்தப் பெண்ணிற்கு கருக்கலைப்பு செய்துள்ளார். பின்னர் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்துவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மகா அக்ஷயின் தாயார் யோகீதா இந்த வழக்கை திரும்பப்பெருமாறு அச்சுறுத்தியதாக பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.