×

இந்த உலகத்துலயே கங்கணாவுக்கு நிம்மதியான இடம் இதுதான்…!

கங்கணா ரணாவத் நடித்துவரும் ‘தலைவி’ படத்தின் ஷூட்டிங், மறுபடியும் தொடங்கியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் படம் ‘தலைவி’. ஏ.எல்.விஜய் இயக்கிவரும் இந்தப் படத்தில், ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கணா ரணாவத் நடிக்கிறார். எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி, கருணாநிதி கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ், ஜானகி ராமச்சந்திரன் கதாபாத்திரத்தில் மதுபாலா, வி.கே.சசிகலா கதாபாத்திரத்தில் பூர்ணா ஆகியோர் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 மொழிகளில் இந்தப் படம்
 

கங்கணா ரணாவத் நடித்துவரும் ‘தலைவி’ படத்தின் ஷூட்டிங், மறுபடியும் தொடங்கியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் படம் ‘தலைவி’. ஏ.எல்.விஜய் இயக்கிவரும் இந்தப் படத்தில், ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கணா ரணாவத் நடிக்கிறார்.

எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி, கருணாநிதி கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ், ஜானகி ராமச்சந்திரன் கதாபாத்திரத்தில் மதுபாலா, வி.கே.சசிகலா கதாபாத்திரத்தில் பூர்ணா ஆகியோர் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 மொழிகளில் இந்தப் படம் உருவாகி வருகிறது

.

விஷால் விட்டல் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். விஷ்ணுவர்தன் இந்தூரி மற்றும் ஷைலேஷ் ஆர் சிங் இணைந்து தயாரிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு சில நாட்கள் மீதமிருந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டது. தற்போது படப்பிடிப்புக்கு அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், சமீபத்தில் மறுபடியும் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து ட்விட்டரில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ள கங்கணா, ‘காலை வணக்கம் நண்பர்களே… மிகத்திறமையான, அதிக பாசம் காட்டக்கூடிய இயக்குநரான ஏ.எல்.விஜய்யுடன் காட்சி பற்றிய ஆலோசனையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.

இந்த உலகத்தில் எவ்வளவோ அழகான இடங்கள் இருக்கலாம். ஆனால், படப்பிடிப்புத் தளங்கள் மட்டுமே எனக்கு நிம்மதியைத் தருவதோடு, இனிமையாகவும் இருக்கின்றன’ என தெரிவித்துள்ளார்.