×

ரசிகர்களுடன் எவ்வாறு பழகுவது ? விஜய்யை புகழ்ந்த பிரபல பாலிவுட் நடிகை…

ரசிகர்களுடன் எவ்வாறு பழகுவது என்பதை நடிகர் விஜய்யை பார்த்து கற்றுக்கொண்டேன் என பிரபல பாலிவுட் நடிகை தெரிவித்துள்ளார். கடந்த 2000ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றவர் நடிகை பிரிங்கா சோப்ரா. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக கலக்கி வந்த அவர் ஹாலிவுட்டையும் விட்டு வைக்கவில்லை. தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் பிரியங்கா உலக ரசிகர்களிடையே நீங்கா இடம்பிடித்துள்ளார். பெண்களுக்கு முன்னூதாரணமாக இருக்கும் பிரியங்கா, திரையுலகில் பல சாதனைகளை படைத்துள்ளார். ‘தமிழன்’ படம் மூலம் விஜய்யிக்கு ஜோடியாக
 

ரசிகர்களுடன் எவ்வாறு பழகுவது என்பதை நடிகர் விஜய்யை பார்த்து கற்றுக்கொண்டேன் என பிரபல பாலிவுட் நடிகை தெரிவித்துள்ளார்.

கடந்த 2000ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றவர் நடிகை பிரிங்கா சோப்ரா. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக கலக்கி வந்த அவர் ஹாலிவுட்டையும் விட்டு வைக்கவில்லை. தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் பிரியங்கா உலக ரசிகர்களிடையே நீங்கா இடம்பிடித்துள்ளார். பெண்களுக்கு முன்னூதாரணமாக இருக்கும் பிரியங்கா, திரையுலகில் பல சாதனைகளை படைத்துள்ளார். ‘தமிழன்’ படம் மூலம் விஜய்யிக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களிடையே முதல்முதலாக அறிமுகமானார்.

இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா ‘அன்பினிஷ்டு’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தனது திரை வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார. உலக அழகி பட்டம் வென்று திரையுலகில் நுழைந்தபோது இயக்குனர்கள் சிலர் தன்னிடம் நடந்துக்கொண்ட விதம் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்படி வாழ்க்கையில் ஏற்பட்ட பல அனுபவங்களை அந்த புத்தகத்தில் பகிர்ந்துள்ள பிரியங்கா, நடிகர் விஜய்யுடனான நட்பு குறித்தும் கூறியுள்ளார். ”விஜய் தனது ரசிகர்களிடம் பழகும் விதம், தாராள மனப்பான்மை ஆகியவை என்னை வெகுவாக கவர்ந்தது. அவருடனான நட்பு எனக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எனது வெப் தொடரான ‘குவாண்டிகோவின்’ ஷூட்டிங்காக நியூயார்க் நகருக்கு சென்றிருந்தேன். அப்போது தன்னை பார்த்த ரசிகர்கள் புகைப்படம் எடுக்க திரண்டனர். இதையடுத்து மதிய உணவு இடைவேளையின் போது ரசிகர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டேன். ரசிகர்களுடன் எவ்வாறு நடந்துக்கொள்வது குறித்து நடிகர் விஜய்யுடனான நட்பு தனக்கு முன்மாதிரியாக அமைந்தது என்று தனது புத்தகத்தில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா குறிப்பிட்டுள்ளார்.