×

சுஷாந்த் இறப்பு குறித்து வேதனை பதிவிட்ட பிரபல நடிகர் !

நடிகர் சுஷாந்தின் இறப்பு ஒட்டுமொத்த இந்தியாவையும் துயரத்தில் ஆழ்த்தியது. பாலிவுட்டின் சில பிரபல நடிகர்கள் தான் அவரது இறப்பிற்கு காரணம் என்று பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. “அவர் நடிக்க இருந்த அனைத்து படங்களிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார். அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தான் அவரை தற்கொலைக்கு தூண்டியது” எனவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். சுஷாந்தின் இறப்பு குறித்து பல பிரபலங்கள் தங்கள் கருத்தை மற்றும் இரங்கல் செய்திகளை தெரிவித்துள்ள தெரிவித்தனர் தற்போது நடிகர் சோனு சூட்
 

நடிகர் சுஷாந்தின் இறப்பு ஒட்டுமொத்த இந்தியாவையும் துயரத்தில் ஆழ்த்தியது. பாலிவுட்டின் சில பிரபல நடிகர்கள் தான் அவரது இறப்பிற்கு காரணம் என்று பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. “அவர் நடிக்க இருந்த அனைத்து படங்களிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார். அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தான் அவரை தற்கொலைக்கு தூண்டியது” எனவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சுஷாந்தின் இறப்பு குறித்து பல பிரபலங்கள் தங்கள் கருத்தை மற்றும் இரங்கல் செய்திகளை தெரிவித்துள்ள தெரிவித்தனர் தற்போது நடிகர் சோனு சூட் இது குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஊரடங்கால் சிக்கித்தவித்த பல வெளிமாநிலத் தொழிலாளர்களை தங்கள் சொந்த ஊர் திரும்ப ஏற்பாடு செய்து கொடுத்து நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக பார்க்கப்படுகிறார் சோனு சூட். அவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டுமென்றும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வருகின்றனர்.


தற்போது அவர் நடிகர் சுஷாந்த் இறப்பு குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் “நீங்கள் செய்தது தவறு சகோதரரே! இன்று நான் எப்படி உணர்கிறேன் என்பதை சொல்ல எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. நீ ஒரு சாதனையாளர் நண்பா… அது அனைவருக்கும் தெரியும். நீ இன்னும் அதிக காலம் வாழ்ந்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நாங்கள் அனைவரும் உன்னைப் பிரிந்து வாடுகிறோம். எப்போதும் எங்களால் தவிர்க்கமுடியாத ஒரு நண்பரை, சகோதரரை நாங்கள் இழந்து வாடுகிறோம்! பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். இந்த செய்தியை பரபரப்பாக்க வேண்டாம். அதேபோல் சுஷாந்தின் கடைசி புகைப்படங்களை பகிர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன். கண்களில் பல கனவுகளோடு நகரத்திற்கு புறப்பட்டு வந்த ஒரு பையன் நிறைய சாதிக்கவும் செய்தான். உன் ஆன்மா சாந்தியடையட்டும்!” என்று நெகிழ்ச்சி பதிவிட்டுள்ளார்.