×

இதனால்தான் படவாய்ப்பு பறிப்போய்டுச்சாம்…கதறும்‌ நடிகை…

திருமணத்திற்கு பிறகு அந்த கேரக்டரில் நடிச்சதாலதான் படவாய்ப்புகள் குறைந்து விட்டதாக நடிகை ஒருவர் புலம்பி வருகிறார். திருமணத்துக்குப்பிறகு கதாநாயகிகள் நிறைய பேர் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே தான் இருக்கின்றன. ரசிகர்கள் விரும்பினால் போதும் திருமணத்திற்கு முன்பின் எதுவும் கிடையாது. ரொமான்ஸ்,கவர்ச்சி என திரைப்படங்களில் தாராளம் காட்டும் சில நடிகைகள் திருமணத்திற்கு பிறகு ஆளே மாறிவிடுகின்றனர். அப்படி ஒரு நடிகை திருமணத்திற்கு பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று கூறி வந்தார். ஏனோ தெரியவில்லை
 

திருமணத்திற்கு பிறகு அந்த கேரக்டரில் நடிச்சதாலதான் படவாய்ப்புகள் குறைந்து விட்டதாக நடிகை ஒருவர் புலம்பி வருகிறார்.

திருமணத்துக்குப்பிறகு கதாநாயகிகள்‌ நிறைய பேர் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே தான் இருக்கின்றன. ரசிகர்கள் விரும்பினால் போதும் திருமணத்திற்கு முன்பின் எதுவும் கிடையாது. ரொமான்ஸ்,கவர்ச்சி என திரைப்படங்களில் தாராளம் காட்டும் சில நடிகைகள்‌ திருமணத்திற்கு பிறகு ஆளே மாறிவிடுகின்றனர்.

அப்படி ஒரு‌ நடிகை திருமணத்திற்கு பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்று‌ கூறி வந்தார். ஏனோ தெரியவில்லை அவர்‌ நடித்த திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லையாம். இதற்கு என்ன காரணம் என அவர் விசாரித்தாராம். அப்போதுதான் சில உண்மைகள் தெரிய வந்தது. திருமணத்திற்கு பிறகு வித்தியாசமாக நடிக்கவேண்டும் என எண்ணி மாற்று திறனாளி கதாபாத்திரத்தில் ஒரு படத்தில் நடித்துள்ளார்.

இதனால் திரைப்படங்களில் வாய்ப்பு குறைந்துவிட்டதாம்.
இதையடுத்து அதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை என உறுதியான முடிவு எடுத்துவிட்டாராம். தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் இது குறித்து தெளிவாக கூறிவிடுகிறாராம்.