×

கிணற்றை காணும் காமெடி நடிகர் திடீர் மரணம்… சோகத்தில் தமிழ் திரையுலகம்!

நடிகர் நெல்லை சிவா மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 69. தமிழ் சினிமாவில் தற்போதைய காலகட்டத்தில் காமெடி என்றால் நம் நினைவுக்கு வருவது வடிவேலு, விவேக், சந்தானம், யோகிபாபு இவர்கள் தான். ஆனால் இவர்கள் உடன் வரும் சக நடிகர்கள் உதவியுடன் தான் இவர்களால் மிகச் சிறந்த நகைச்சுவை காட்சிகளை உருவாக்க முடியும். அப்படிப்பட்டவர்களின் ஒருவர் தான் நெல்லை சிவா. இவர் தமிழில் பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவரது கம்பீரமான நெல்லைத் தமிழ்
 

நடிகர் நெல்லை சிவா மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 69.

தமிழ் சினிமாவில் தற்போதைய காலகட்டத்தில் காமெடி என்றால் நம் நினைவுக்கு வருவது வடிவேலு, விவேக், சந்தானம், யோகிபாபு இவர்கள் தான். ஆனால் இவர்கள் உடன் வரும் சக நடிகர்கள் உதவியுடன் தான் இவர்களால் மிகச் சிறந்த நகைச்சுவை காட்சிகளை உருவாக்க முடியும்.

அப்படிப்பட்டவர்களின் ஒருவர் தான் நெல்லை சிவா. இவர் தமிழில் பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவரது கம்பீரமான நெல்லைத் தமிழ் பார்க்கும் அனைவரையும் ரசிக்க வைக்கும். பாண்டிராஜ் நடிப்பில் வெளியான ‘ஆண்பாவம்’ படத்தின் மூலம் சினிமாவில் இவர் அறிமுகமானார். கடைசியாக த்ரிஷா நடிப்பில் வெளியான ‘பரமபதம் விளையாட்டு’ படத்தில் நடித்திருந்தார். இதுவரை இவர் 500 படங்களுக்கு மேல் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வடிவேலுவுடன் கிணற்றைக் காணும் என்ற இவரது காமெடி காட்சி மிகவும் பிரபலம்.

இந்நிலையில் நெல்லை சிவா அவரது சொந்த ஊரான பனங்குடியில் வைத்து மாரடைப்பு ஏற்பட்டு இன்று மாலை 6 மணியளவில் காலமாகியுள்ளார். இந்த செய்தி தமிழ் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.