×

முதல்முறையாக முதல்வர் பதவியில் அமர்கின்ற அன்பு சகோதரருக்கு வாழ்த்துக்கள் – நடிகர் பிரபு..

முதல்முறையாக முதல்வர் பதவியில் அமரும் அன்பு சகோதரருக்கு நடிகர் திலகம் குடும்பம் சார்பாக வாழ்த்துக்கள் என நடிகர் பிரபு தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 6ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. அதிமுக ஒரு அணியாகவும், திமுக ஒரு அணியாகவும் நின்றாலும் ஐந்து முனைபோட்டி நிலவியது. இதில் 159 தொகுதிகளை கைப்பற்றி தி.மு.க அமோக வெற்றிப்பெற்றது. இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூடி ஒருமனதாக மு.க.ஸ்டாலினை முதல்வராக தேர்ந்தெடுக்க உள்ளனர். இதைத்தொடர்ந்து வரும்
 

முதல்முறையாக முதல்வர் பதவியில் அமரும் அன்பு சகோதரருக்கு நடிகர் திலகம் குடும்பம் சார்பாக வாழ்த்துக்கள் என நடிகர் பிரபு தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 6ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. அதிமுக ஒரு அணியாகவும், திமுக ஒரு அணியாகவும் நின்றாலும் ஐந்து முனைபோட்டி நிலவியது. இதில் 159 தொகுதிகளை கைப்பற்றி தி.மு.க அமோக வெற்றிப்பெற்றது. இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூடி ஒருமனதாக மு.க.ஸ்டாலினை முதல்வராக தேர்ந்தெடுக்க உள்ளனர்.

இதைத்தொடர்ந்து வரும் 7ம் தேதி மிகவும் எளியான முறையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. ஆனால் பதவியேற்புக்கு முன்னரே கொரானாவுக்கான பணிகளை செய்து வருகிறார் ஸ்டாலின். முதல்வராக பதவியேற்கும் ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினரும் நேரிலும், சமூக வலைத்தளம் வழியாகவும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திரைப்பிரபலங்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சிவாஜியின் மகனும், நடிகருமான பிரபு ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அருமை பெரியப்பா டாக்டர் கலைஞர் வழியில் நின்று கடுமையான சோதனைகளை கடந்தவர் அண்ணன் தளபதி ஸ்டாலின் அவர்கள். அப்பாவின் அடிச்சுவற்றில் அயராது மக்கள் பணியாற்றி நல்லரசு நடத்திட வாழ்த்துகிறேன். முதன் முதலாக முதல்வர் பதவியில் அமர்கின்ற அன்பு சகோதரருக்கு நடிகர் திலகம் குடும்பத்தின் சார்பில் வரவேற்பும், வாழ்த்துகளும் என்று தெரிவித்துள்ளார்.