×

விவேக்கின் வயதுக்கு மரியாதை… வித்தியாசமாக மரக்கன்று நட்ட ரம்யா பாண்டியன்…

நடிகர் விவேக்கின் வயத்திற்கு மரியாதை கொடுக்கும் வகையில் வித்தியாசமான முறையில் நடிகை ரம்யா பாண்டியன் மரக்கன்றுகளை நட்டுள்ளார். நடிகர் விவேக் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவு, திரையுலகினரையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. மரங்களை நேசித்த உன்னத மனிதன் நடிகர் விவேக். அப்துல் கலாமின் தீவிர விசுவாசியாக இருந்த விவேக், அவரது கனவு திட்டமாக ‘கிரீன் கலாம்’ என்ற திட்டத்தை நிறைவேற்ற மரங்களை நட்டு வந்தார். அவர் விட்டுச் சென்ற பணியை தொடரவேண்டும்
 

நடிகர் விவேக்கின் வயத்திற்கு மரியாதை கொடுக்கும் வகையில் வித்தியாசமான முறையில் நடிகை ரம்யா பாண்டியன் மரக்கன்றுகளை நட்டுள்ளார்.

நடிகர் விவேக் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவு, திரையுலகினரையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. மரங்களை நேசித்த உன்னத மனிதன் நடிகர் விவேக். அப்துல் கலாமின் தீவிர விசுவாசியாக இருந்த விவேக், அவரது கனவு திட்டமாக ‘கிரீன் கலாம்’ என்ற திட்டத்தை நிறைவேற்ற மரங்களை நட்டு வந்தார்.

அவர் விட்டுச் சென்ற பணியை தொடரவேண்டும் என்ற நோக்கில் பல்வேறு தரப்பினரும் மரங்களை நட்டு உதாரணமாக மாறி வருகின்றனர். சமீபத்தில்கூட நடிகர் அருண் விஜய் குடும்பத்துடன் தனது வீட்டில் மரக்கன்றுகளை நட்டு ரசிகர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தார். அதேபோன்று நடிகர் சிம்பும், தனது மாநாடு குழுவினருடன் மரக்கன்றுகளை நட்டு, மற்றவர்களுக்கு முன்னூதாரணமாக மாறினார்.

அந்த வரிசையில் நடிகை ரம்யா பாண்டியனும், தனது பங்கிற்கு மரங்களை நட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அவர், நடிகர் விவேக் நினைவாக 59 மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளார். இது நடிகர் விவேக்கின் வயதை குறிக்கும் வகையில் வித்தியாசமான முயற்சியாகும். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் நடிகை ரம்யா பாண்டியன் பதிவிட்டுள்ளார்.