×

ரசிகரின் செல்ஃபியால் கோபமடைந்து செல்போனை பறித்த அஜித்… வாக்குச் சாவடியில் பரபரப்பு!

வாக்களிக்கச் சென்ற இடத்தில் ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க முன்வந்த போது, அஜித் கோபமடைந்து அவரது செல்போனை பறித்துச் சென்றது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று தமிழக முழுவதும் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை முதல் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். நடிகர்களின் அஜித் எப்போதும் முதல் ஆளாக வந்து வாக்களித்துவிடுவது வழக்கம். இன்றும் காலையிலே வாக்குச் சாவடி வந்தார். அப்போது அங்கு கூட்டம் அதிகமானது. காவல்துறையினர் அஜித் அருகே வர சில நிமிடங்கள்
 

வாக்களிக்கச் சென்ற இடத்தில் ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க முன்வந்த போது, அஜித் கோபமடைந்து அவரது செல்போனை பறித்துச் சென்றது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று தமிழக முழுவதும் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை முதல் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். நடிகர்களின் அஜித் எப்போதும் முதல் ஆளாக வந்து வாக்களித்துவிடுவது வழக்கம். இன்றும் காலையிலே வாக்குச் சாவடி வந்தார். அப்போது அங்கு கூட்டம் அதிகமானது.

காவல்துறையினர் அஜித் அருகே வர சில நிமிடங்கள் ஆன நேரத்தில் ரசிகர்கள் அஜித் உடன் செல்ஃபி எடுக்க குவிந்தனர். உடனே அஜித் அவர்களை கோபத்துடன் பார்க்கவே சிலர் பின்வாங்கினர்.

இருப்பினும் ஒருவர் செல்ஃபி எடுக்க முன்வந்த போது , கோபமடைந்த அஜித் அவரது செல்போனை பறித்துக் கொண்டார். இது அந்த நபருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் வாக்களித்து முடித்தததும் அந்த நபரை அழைத்து கூட்டமாக சேருவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்திவிட்டு செல்போனை திருப்பிக் கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.