×

‘கேஜிஎஃப் 2’ படத்திற்காக வெறித்தனமான சண்டைக் காட்சிகளை உருவாக்கும் அன்பறிவ் சகோதரர்கள்!

இயக்குனர் பிரசாந்த் நீல் சில மாதங்களுக்கு முன்பு கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பைத் துவங்கினார். சில தினங்களுக்கு முன்பு பிரஷாந்த் நீல் பிரபாஸுடன் கூட்டணி அமைக்கும் பிரம்மாண்ட படமான ‘சலார்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்றது. இதற்கிடையில் யாஷ் ரசிகர்கள் மற்றும் கேஜிஎஃப் ரசிகர்கள் ‘கேஜிஎஃப் 2’ படத்தின் அப்டேட் கொடுக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதையடுத்து படத்தில் கிளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகப் படக்குழு தெரிவித்தனர். கேஜிஎஃப் படத்திற்கு அன்பறிவ் சகோதரர்கள்
 

இயக்குனர் பிரசாந்த் நீல் சில மாதங்களுக்கு முன்பு கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பைத் துவங்கினார். சில தினங்களுக்கு முன்பு பிரஷாந்த் நீல் பிரபாஸுடன் கூட்டணி அமைக்கும் பிரம்மாண்ட படமான ‘சலார்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்றது.

இதற்கிடையில் யாஷ் ரசிகர்கள் மற்றும் கேஜிஎஃப் ரசிகர்கள் ‘கேஜிஎஃப் 2’ படத்தின் அப்டேட் கொடுக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதையடுத்து படத்தில் கிளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகப் படக்குழு தெரிவித்தனர்.

கேஜிஎஃப் படத்திற்கு அன்பறிவ் சகோதரர்கள் ஸ்டண்ட் கோரியோகிராஃப் செய்து வருகின்றனர்.

கேஜிஎஃப் முதல் பாகத்திலே சண்டைக் காட்சிகள் தான் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பக்கபலமாக அமைந்தது என்று சொல்லலாம். அன்பறிவ் சகோதரர்கள் தாங்கள் கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் இறக்கி கேஜிஎஃப் முதல் பாகத்திற்கு ஸ்டண்ட் கோரியோகிராஃப் செய்திருந்தனர். அந்தப் படத்திற்காக அவர்களுக்கு தேசிய விருது கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

தற்போது விஷ்ணு விஷாலின் மோகன்தாஸ் படத்திலும் அன்பறிவ் சகோதரர்கள் இணைந்துள்ளதால் படத்தில் வேற லெவல் சண்டைக் காட்சிகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.