×

பிரபல பாடகர்களை நடிகர்களாக்கிய ‘குஷ்பு’

பிரபல பாடகர்களை தனது படத்தில் நடிகர்களாக நடிக்க வைத்துள்ளதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் படம் அரண்மனை 3. ஏற்கனவே அரண்மனை படத்தின் இரண்டு பாகங்கள் வெளியாகி வெற்றிப்பெற்ற நிலையில், மூன்றாவது பாகமாக இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து, தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, விசாகா சிங், சாக்ஷி அகர்வால், விவேக், யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்டோர்
 

பிரபல பாடகர்களை தனது படத்தில் நடிகர்களாக நடிக்க வைத்துள்ளதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் படம் அரண்மனை 3. ஏற்கனவே அரண்மனை படத்தின் இரண்டு பாகங்கள் வெளியாகி வெற்றிப்பெற்ற நிலையில், மூன்றாவது பாகமாக இந்த படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து, தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, விசாகா சிங், சாக்‌ஷி அகர்வால், விவேக், யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளநிலையில் படத்தின் தயாரிப்பாளர் குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் பிரபல பாடகர்களாக ஹரிஹரன், சங்கர் மகாதேவன் ஆகிய இருவரும், அரண்மனை 3 படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளனர். அந்த பாடலுக்காக நடிக்கவும் செய்துள்ளனர். இது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக குஷ்பு தெரிவித்துள்ளார்.