×

இவரா இப்படி… போஸ்டரை கலாய்க்கும் நெட்டிசன்கள்

‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் வெற்றியையடுத்து இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக இயக்குனர் செல்வராகவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். கடந்த 2010ம் ஆண்டு நடிகர் கார்த்தியை வைத்து ஆயிரத்தில் ஒருவன் முதல் பாகத்தை செல்வராகவன் எடுத்தார். மாபெரும் வெற்றியடைந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் தனுஷை வைத்து ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தை உருவாக்க இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். இதையடுத்து போஸ்டர் ஒன்றையும் அவர் வெளியிட்டார். இதில்தான்
 

‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் வெற்றியையடுத்து இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக இயக்குனர் செல்வராகவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.


கடந்த 2010ம் ஆண்டு நடிகர் கார்த்தியை வைத்து ஆயிரத்தில் ஒருவன் முதல் பாகத்தை செல்வராகவன் எடுத்தார். மாபெரும் வெற்றியடைந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நடிகர் தனுஷை வைத்து ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தை உருவாக்க இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். இதையடுத்து போஸ்டர் ஒன்றையும் அவர் வெளியிட்டார்.

இதில்தான் சர்ச்சையே ஏற்பட்டது. இந்த சர்ச்சைக்கு காரணம் ஆயிரத்தில் ஒருவன் 2 போஸ்டர், ஒரு குறிப்பிட்ட நாவலில் இருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளது என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

பிரெஞ்சு ஓவியக் கலைஞர் மேத்யூ லாப்ரே என்ற ஆர்ட் புத்தகத்திலிருந்து அந்த போஸ்டர் காப்பியடிக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.