×

மீண்டும் திரையில் இணையும் பரியேறும் பெருமாள் கதிர் – ஆனந்தி ஜோடி !

பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் ஜோடியாக நடித்த நடிகர் கதிர் மற்றும் ஆனந்தி மீண்டும் ஜோடிசேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் , இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியான திரைப்படம் ‘பரியேறும் பெருமாள்’ . சாதிய ஒடுக்குமுறையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் மக்களிடையே அமோக வரவேற்பைப்பெற்றது. கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு உள்ளிட்டோர் இப்படத்தில் சிறப்பாக நடித்திருந்தனர். மேலும் கடந்த 2018ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படமாக பரியேறும் பெருமாள் படம்
 

பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் ஜோடியாக நடித்த நடிகர் கதிர் மற்றும் ஆனந்தி மீண்டும் ஜோடிசேர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் , இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் வெளியான திரைப்படம் ‘பரியேறும் பெருமாள்’ . சாதிய ஒடுக்குமுறையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் மக்களிடையே அமோக வரவேற்பைப்பெற்றது. கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு உள்ளிட்டோர் இப்படத்தில் சிறப்பாக நடித்திருந்தனர்.

மேலும் கடந்த 2018ஆம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படமாக பரியேறும் பெருமாள் படம் புதுச்சேரி அரசால் தேர்வு செய்யப்பட்டது. படத்தில் கதிர் மற்றும் ஆனந்தியின் இயல்பான நடிப்பு மற்றும் காம்போ படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்ததால், அவர்கள் இணைந்து மீண்டும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.இதுகுறித்த அதிகார்வப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது பிரபாகரன் இயக்கத்தில் வெளியாக உள்ள ‘சர்பத்’ படத்தின் வெளியீட்டிற்காக கதிர் காத்திருக்கிறார். ஆனந்திக்கு தமிழில் தொடர்ச்சியாக படங்கள் உள்ளன, மேலும் அவர் ‘ஸோம்பி ரெட்டி’ என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.