×

ராஜஸ்தானில் பிரம்மாண்ட அரண்மனையில் படப்பிடிப்பு… விஜய் சேதுபதியுடன் ராதிகா பகிர்ந்த புகைப்படம்!

டாப்ஸி நடிப்பில் தீபக் சுந்தராஜன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி இணைந்துள்ளார். படபிடிப்புத் தளத்திலிருந்து ராதிகா புகைப்படம் வெளியிட்டுள்ளார். தமிழ் இயக்குனர் மற்றும் நடிகர் சுந்தராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்கும் படத்தில் டாப்ஸி மைய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். யோகிபாபு, ராதிகா ஆகியோரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நடிகை டாப்ஸி ஏற்கனவே இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் ஜெயம் ரவி நடிக்கும்
 

டாப்ஸி நடிப்பில் தீபக் சுந்தராஜன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் விஜய் சேதுபதி இணைந்துள்ளார். படபிடிப்புத் தளத்திலிருந்து ராதிகா புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

தமிழ் இயக்குனர் மற்றும் நடிகர் சுந்தராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்கும் படத்தில் டாப்ஸி மைய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். யோகிபாபு, ராதிகா ஆகியோரும் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தை பேஷன் ஸ்டுடியோஸ்  நிறுவனம் தயாரிக்கிறது. நடிகை டாப்ஸி ஏற்கனவே இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் ஜெயம் ரவி நடிக்கும் ‘ஜன கண மன’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படம் லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே ராஜஸ்தானில் தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது. தற்போது ராதிகா படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதைப் பார்க்கும் போது விஜய் சேதுபதி படப்பிடிப்பில் இணைந்துள்ளதாகத் தெரிகிறது. மற்றொரு புகைப்படத்தில் சுப்பு பஞ்சு, மதுமிதா, தேவதர்ஷினி, சுனில் ஆகியோரும்உள்ளனர். எனவே இவர்களும் அந்தப் படத்தில் நடிக்க இருப்பதாகத் தெரிகிறது. படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.