×

நயனுக்கும் சமனுக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டில் முட்டிக்கிச்சி !

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகவுள்ள ”காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அப்படப்பிடிப்பின் போது சமந்தாவுக்கும் நயன்தாராவுக்கும் நல்ல நட்புறவு ஏற்பட்டுள்ளதாக பேசப்பட்டது.அதுமட்டுமில்லாமல் சமந்தா நயனை தனது சகோதரியை போன்றே பார்த்ததாகவும் அக்கா..சேச்சி என்றெல்லாம் அழைத்ததாக பேசப்பட்டது.மேலும் நயன்தாராவின் பிறந்தநாள் அன்று ,“ஹாப்பி பர்த்டே ஒன் அண்ட் ஒன்லி நயன்தாரா .,தொடர்ந்து பிரகாசித்துக் கொண்டே இருங்கள். நம்முடையது எதுவோ அதற்காகப் போராட வேண்டும் என்பதற்கான ஊக்கமாய்
 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகவுள்ள ”காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அப்படப்பிடிப்பின் போது சமந்தாவுக்கும் நயன்தாராவுக்கும் நல்ல நட்புறவு ஏற்பட்டுள்ளதாக பேசப்பட்டது.அதுமட்டுமில்லாமல் சமந்தா நயனை தனது சகோதரியை போன்றே பார்த்ததாகவும் அக்கா..சேச்சி என்றெல்லாம் அழைத்ததாக பேசப்பட்டது.மேலும் நயன்தாராவின் பிறந்தநாள் அன்று ,“ஹாப்பி பர்த்டே ஒன் அண்ட் ஒன்லி நயன்தாரா .,தொடர்ந்து பிரகாசித்துக் கொண்டே இருங்கள். நம்முடையது எதுவோ அதற்காகப் போராட வேண்டும் என்பதற்கான ஊக்கமாய் இருங்கள். நீங்கள் இன்னும் சிறக்க வேண்டும் சகோதரி . உங்கள் வலிமைக்கும், அமைதியான உறுதி நிலைக்கும் என் வணக்கங்கள்” என்றெல்லாம் சமந்தா ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில் அவர்களுக்கிடையே தற்போது மனசுதாபம் ஏற்பட்டுள்ளதாம். ஷூட்டிங் ஸ்பாட்டில் சமந்தாவிற்கு மேலாக நயத்தாராவுக்கு தான் அதிக மரியாதை கொடுக்கப்படுகிறதாம்.இதனால் கடுப்பான சமந்தா அப்படத்தை விட்டு விலக போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

என்னதான் சமந்தா பெரிய நாயகியாக இருந்தாலும் படத்தின் இயக்குனர் என்னவோ நயன்தாராவுக்கு அல்லவா காதலர் ..!