×

‘தரமணி’ பட இயக்குனருடன் இணையும் சிம்பு…

நடிகர் சிம்பு இயக்குனர் ராம் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ஈஸ்வரன்’ படத்திற்கு பிறகு சிம்பு அடுத்தடுத்த படங்களில் வேகமாக நடித்து வருகிறார். கால்ஷீட் பிரச்சனை, நேரத்திற்கு ஷூட்டிங் செல்வது என பம்பரமாய் சுழன்று திரைப்படங்களை முடித்துகொடுக்கிறார். அந்தவகையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாநாடு’ படத்தையும் முடித்துவிட்டார். சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி பட்டையை கிளப்பியது. மாநாடு படத்தில் சிம்புவின் பணிகள் முடிந்துவிட்டதால் அடுத்த படத்திற்கான வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார். கௌதம்
 

நடிகர் சிம்பு இயக்குனர் ராம் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘ஈஸ்வரன்’ படத்திற்கு பிறகு சிம்பு அடுத்தடுத்த படங்களில் வேகமாக நடித்து வருகிறார். கால்ஷீட் பிரச்சனை, நேரத்திற்கு ஷூட்டிங் செல்வது என பம்பரமாய் சுழன்று திரைப்படங்களை முடித்துகொடுக்கிறார். அந்தவகையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாநாடு’ படத்தையும் முடித்துவிட்டார். சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி பட்டையை கிளப்பியது.

மாநாடு படத்தில் சிம்புவின் பணிகள் முடிந்துவிட்டதால் அடுத்த படத்திற்கான வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார். கௌதம் மேனனுடன் அடுத்த படத்திற்காக கூட்டணி சேர்ந்துள்ளார். இந்த படத்தில் சிம்புடன் நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்தை நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார் என்பது உறுயாகிவிட்டது. இந்த படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. விரைவில் ஷூட்டிங் துவங்கவுள்ளது.

இந்நிலையில் சிம்புவின் அடுத்த படத்தை யார் இயக்குவார் என்ற கேள்வி எழுந்தது. அதற்கு பதிலளிக்கும் விதமாக இயக்குனர் ராம் சிம்புவின் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ராம் ஏற்கனவே பேரன்பு, தரமணி, தங்க மீன்கள், கற்றது தமிழ் போன்ற‌ வெற்றி படங்களை இயக்கியுள்ளார். சிம்பு-ராம் கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.