×

பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் நலம்பெற வாழ்த்திய பாடகி சித்ரா மற்றும் நடிகர் வடிவேலு!

சில தினங்களுக்கு முன்பு பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் அவருக்கு போன் செய்து நலம் விசாரித்தனர். பின்னர் நேற்று உடல்நிலை மிகவும் கலவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்திருந்தனர். உடல்நிலை மோசமாகி வருவதால் வல்லுனர்களின் அறிவுரைப்படி அவர் ICU-விற்கு மாற்றப்பட்டுள்ளார். அதையடுத்து பின்னர் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பிரபலங்கள் அனைவரும் SPB கொரோனாவிலிருந்து மீண்டு வரவேண்டும் என்று கூறி விடீயோக்கள்
 

சில தினங்களுக்கு முன்பு பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் அவருக்கு போன் செய்து நலம் விசாரித்தனர்.
பின்னர் நேற்று உடல்நிலை மிகவும் கலவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்திருந்தனர். உடல்நிலை மோசமாகி வருவதால் வல்லுனர்களின் அறிவுரைப்படி அவர் ICU-விற்கு மாற்றப்பட்டுள்ளார். அதையடுத்து பின்னர் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் பிரபலங்கள் அனைவரும் SPB கொரோனாவிலிருந்து மீண்டு வரவேண்டும் என்று கூறி விடீயோக்கள் வெளியிட்டு வருகின்றனர்.
தற்போது இசைஞானி இளையராஜாவும் “பாலு, சீக்கிரமா எழுந்துவா, உனக்காக காத்திருக்கிறேன்” என்று உணர்வுப் பூர்வமாக பதிவு வெளியிட்டிருந்தார்.

SPB சார் மிகவும் நேர்மறை எண்ணம் கொண்ட வலிமையான நபர். அவர் இப்போது இருக்கும் நிலையிலிருந்து நிச்சயம் மீண்டு வருவார். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்போம்” என்று பாடகி KS சித்ரா தெரிவித்துள்ளார்.