×

டூப் போடாமல் சண்டை காட்சிகளில் நவரச நாயகன்… அதிரடி ஆக்ஷனில் தூள் பறக்கிறது…

நடிகர் கார்த்திக் நீண்ட இடைவெளிக்கு பிறகு டூப் போடாமல் சண்டை காட்சிகளில் நடித்துள்ளார். நீண்ட நாள்களுக்கு பிறகு நடிகர் கார்த்திக் ஹீரோவாக நடிக்கும் படம் ‘தீ இவன்’. மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிக்கும் இப்படத்தை டி.எம்.ஜெயமுருகன் இயக்கி வருகிறார். இவரே இசையமைத்துள்ள இந்த படத்தில் நடிகை சுகன்யா, ஐஸ்வர்யா லட்சுமி, அர்த்திகா, சேது அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு, இயக்குனர் சரவண சக்தி, உள்ளிட்ட திரைநட்சத்திரங்கள் நடித்துள்ளனர். குடும்ப சென்ட்டிமெண்ட்
 

நடிகர் கார்த்திக் நீண்ட இடைவெளிக்கு பிறகு டூப் போடாமல் சண்டை காட்சிகளில் நடித்துள்ளார்.

நீண்ட நாள்களுக்கு பிறகு நடிகர் கார்த்திக் ஹீரோவாக நடிக்கும் படம் ‘தீ இவன்’. மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிக்கும் இப்படத்தை டி.எம்.ஜெயமுருகன் இயக்கி வருகிறார். இவரே இசையமைத்துள்ள இந்த படத்தில் நடிகை சுகன்யா, ஐஸ்வர்யா லட்சுமி, அர்த்திகா, சேது அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு, இயக்குனர் சரவண சக்தி, உள்ளிட்ட திரைநட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

குடும்ப சென்ட்டிமெண்ட் கதையாக உருவாகி வரும் படத்தின் ஷூட்டிங் 70 சதவீதம் முடிவடைந்துள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. விரைவில் இந்த படத்தை திரைக்கு கொண்டு வர வேகமாக பணிகள் நடைபெற்று வருகிறது.

‘தீ இவன்’ படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. இதில் நடிகர் கார்த்திக் ஹார்லி டேவிட்சன் பைக்கில் வருவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. அப்போது அதிரடி சண்டைக் காட்சிகளும் இடம்பெற்றன. இதில் கார்த்திக் டூப் போடாமல் முழு காட்சியையும் நடித்து முடித்துள்ளார். பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தில் பழைய நவரச நாயகனை காணலாம் என்று கூறப்படுகிறது.