×

போலீஸ் அதிகாரியாக மிரட்டும் வரும் உதயநிதி…படத்தின் ஷூட்டிங் தொடங்கியது…

உதயநிதி நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. இந்தியில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்ற திரைப்படம் ‘ஆர்டிகிள் 15’ ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அனுபவ் சின்ஹா இயக்கத்தில் உருவான இப்படம் நாடு முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. விமர்சன ரீதியாக மாபெரும் வெற்றி பெற்ற இப்படம்,சாதி பாகுபாடுகள் குறித்து கடுமையான சாடியது. இந்தப் படத்தின் ரீமேக் உரிமைகளைக் கைப்பற்ற தென்னிந்தியாவில் கடும் போட்டி நிலவியது. அதன்பிறகு
 

உதயநிதி நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது.

இந்தியில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்ற திரைப்படம் ‘ஆர்டிகிள் 15’ ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அனுபவ் சின்ஹா இயக்கத்தில் உருவான இப்படம் நாடு முழுவதும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

விமர்சன ரீதியாக மாபெரும் வெற்றி பெற்ற இப்படம்,சாதி பாகுபாடுகள் குறித்து கடுமையான சாடியது. இந்தப் படத்தின் ரீமேக் உரிமைகளைக் கைப்பற்ற தென்னிந்தியாவில் கடும் போட்டி நிலவியது. அதன்பிறகு இந்த படத்தின் ரீமேக் உரிமைகளை போனி கபூர் கைப்பற்றினார். இதையடுத்து தமிழில் இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கி வருகிறார். உதயநிதி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாக உள்ளது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதில் உதயநிதி ஸ்டாலின் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.உதயநிதி தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்ததால் இந்த படம் தொடங்காமல் இருந்தது.தேர்தல் தற்போது முடிந்துள்ளதால் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் புதிய அப்டேட்டுகளை எதிர்பார்கலாம் என கூறப்படுகிறது.