×

நான் இத்தனை வருடங்களாகக் காத்திருப்பது இந்தப் படத்திற்காககத் தான்… இயக்குனர் விக்னேஷ் சிவன் பதில்!

நான் இத்தனை வருடங்களாக ஒரு படத்திற்காக காத்திருக்கிறேன் என்றால் அது நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்காகத் தான் என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் உருவாகி பல ஆண்டுகள் ஆன பின்னும் பல்வேறு பிரச்னைகள் காரணமாக ரிலீஸ் ஆகாமல் இருந்து வந்தது. செல்வராகவன் ரசிகர்களும் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர். அவர்களுக்கு நற்செய்தியாய் நெஞ்சம் மறப்பதில்லை இந்த மாதம் 5-ம்
 

நான் இத்தனை வருடங்களாக ஒரு படத்திற்காக காத்திருக்கிறேன் என்றால் அது நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்காகத் தான் என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் உருவாகி பல ஆண்டுகள் ஆன பின்னும் பல்வேறு பிரச்னைகள் காரணமாக ரிலீஸ் ஆகாமல் இருந்து வந்தது. செல்வராகவன் ரசிகர்களும் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர்.

அவர்களுக்கு நற்செய்தியாய் நெஞ்சம் மறப்பதில்லை இந்த மாதம் 5-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்தனர். இந்தப் படத்தில் ரெஜினா கசான்ட்ரா மற்றும் நந்திதா இருவர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

நேற்று நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் ஸ்னீக் பீக் வெளியானது. செல்வராகவனுக்கே உண்டான ஸ்டைலில் எஸ்ஜே சூர்யாவின் தேர்ந்த நடிப்பில் அந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியது ஸ்னீக் பீக்.

அதையடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவன் படம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். “நான் இந்தப் படத்திற்காக பல வருடங்களாக காத்திருக்கிறேன். இரண்டு லெஜெண்டுகள் ஒன்றாகச் செய்த ரத்தம் தெறிக்கும் காமெடி கலந்த த்ரில்லர் படமாக இது இருக்கும் என்று நினைக்கிறன். இரண்டு புகழ்பெற்ற எழுத்தாளர்கள், இயக்குநர்கள், ஒருவர் நடிப்பில் அசத்தியிருக்கிறார், மற்றொருவர் இயக்கத்தில். நமக்கு வேற என்ன வேண்டும். தீவிரமாகக் காத்திருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.