×

செல்வராகவனுக்கு 3வது குழந்தை… மகிழ்ச்சியில் குடும்பத்தினர்…

இயக்குனர் செல்வராகவன்-கீதாஞ்சலி தம்பதிக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளதால் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தனது தந்தையும், இயக்குனருமான கஸ்தூரிராஜாவின் துள்ளுவதோ இளமை உள்ளிட்ட படங்களில் வசனம் எழுதி தனது பணியை ஆரம்பித்தார் செல்வராகவன். பின்பு காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகே 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன் மற்றும் இரண்டாம் உலகம் போன்ற திரைப்படங்களை இயக்கினார். நடிகை சோனியா அகர்வாலை 2006-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
 

இயக்குனர் செல்வராகவன்-கீதாஞ்சலி தம்பதிக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளதால் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தனது தந்தையும், இயக்குனருமான கஸ்தூரிராஜாவின் துள்ளுவதோ இளமை உள்ளிட்ட படங்களில் வசனம் எழுதி தனது பணியை ஆரம்பித்தார் செல்வராகவன். பின்பு காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகே 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன் மற்றும் இரண்டாம் உலகம் போன்ற திரைப்படங்களை இயக்கினார்.

 நடிகை சோனியா அகர்வாலை 2006-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்பு அவருடன் ஏற்பட்ட மனகசப்பு காரணமாக கடந்த 2009-ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

அதன்பிறகு மயக்கம் என்ன படத்தில் தன்னுடன் பணிபுரிந்த உதவி இயக்குனர் கீதாஞ்சலியை கடந்த 2011-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு ஓம்கார் என்ற மகனும் லீலாவதி என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில், இயக்குனர் செல்வராகவன் தற்போது மூன்றாவது குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இத்தகவலை தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ள கீதாஞ்சலி, குழந்தை நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அப்பதிவில் குழந்தைக்கு ‘ரிஷிகேஷ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.