×

டேட்டிங் ஆப்-பில் பிரியங்கா சோப்ரா முதலீடு!

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா பெண்களின் பாதுகாப்பு நலன் கருதி டேட்டிங் ஆப் ஒன்றில் முதலீடு செய்துள்ளார். மும்பை: பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா பெண்களின் பாதுகாப்பு நலன் கருதி டேட்டிங் ஆப் ஒன்றில் முதலீடு செய்துள்ளார். பம்பில் என்ற டேட்டிங் ஆப்-பை இந்தியாவில் தொடங்க நடிகை பிரியங்கா சோப்ரா முதலீடு செய்துள்ளார். அமெரிக்கா, லண்டன் போன்ற நாடுகளில் டேட்டிங் ஆப்-கள் சாதாரணமாக செய்லபட்டு வருகின்றன. அதன் மூலம் பெண்களும், ஆண்களும், தங்களுக்கு பொருத்தமான ஜோடிகளை தேர்வு
 

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா பெண்களின் பாதுகாப்பு நலன் கருதி டேட்டிங் ஆப் ஒன்றில் முதலீடு செய்துள்ளார்.

மும்பை: பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா பெண்களின் பாதுகாப்பு நலன் கருதி டேட்டிங் ஆப் ஒன்றில் முதலீடு செய்துள்ளார்.

பம்பில் என்ற டேட்டிங் ஆப்-பை இந்தியாவில் தொடங்க நடிகை பிரியங்கா சோப்ரா முதலீடு செய்துள்ளார். அமெரிக்கா, லண்டன் போன்ற நாடுகளில் டேட்டிங் ஆப்-கள் சாதாரணமாக செய்லபட்டு வருகின்றன. அதன் மூலம் பெண்களும், ஆண்களும், தங்களுக்கு பொருத்தமான ஜோடிகளை தேர்வு செய்கின்றனர்.

ஆனால், இதுபோன்ற டேட்டிங் ஆப்-கள் இந்தியாவில் அத்தனை பாதுகாப்பானதாக இல்லை என்ற கருத்து நிலவி வருகிறது. இந்நிலையில், பெண்களின் பாதுகாப்பு நலன் கருதி நடிகை பிரியங்கா சோப்ரா இந்தியாவில் இதனை தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது.

பம்பில் டேட்டிங் ஆப் மூலம் பெண்கள் பாதுகாப்பாகவும், பாலியல் தொல்லைகளில் சிக்காமல், ஏமாறாமல் இருக்கும் வகையில் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முதலில் பெண்களே தங்களது விருப்பத்திற்கு ஏற்ற ஆண்களுக்கு ரிக்வெஸ்ட் கொடுத்து டேட்டிங்கை தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரையுலகில் நடிகை, தயாரிப்பாளர், சமூக சேவகர் என பன்முகம் கொண்ட நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது தொழில்நுட்பத்தில் முதலீடு செய்து புதிய முயற்சியை எடுத்துள்ளார்.