×

திருமணம் தள்ளிப்போவதற்கு மோகன்லால், சுரேஷ் கோபிதான் காரணம் ! – பிரபல நடிகையின் வருத்தம்

பிரபல மலையாள நடிகை லட்சுமி கோபால்சாமி தான் எதிர்பார்த்ததுபோன்ற நபர் கிடைக்காததால் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை என்றும், இன்னும் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். மலையாள படங்களில் அம்மா கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்றவர் லட்சுமி கோபால்சுவாமி. இவர் நடிகர் விக்ரம் நடித்த பீமா படத்தில் பிரகாஷ் ராஜ் ஜோடியாக நடித்துள்ளார் பிரபல மலையாள நடிகை லட்சுமி கோபால்சாமி தான் எதிர்பார்த்ததுபோன்ற நபர் கிடைக்காததால் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை என்றும், இன்னும் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். மலையாள படங்களில் அம்மா கதாபாத்திரங்களில்
 

பிரபல மலையாள நடிகை லட்சுமி கோபால்சாமி தான் எதிர்பார்த்ததுபோன்ற நபர் கிடைக்காததால் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை என்றும், இன்னும் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். மலையாள படங்களில் அம்மா கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்றவர் லட்சுமி கோபால்சுவாமி. இவர் நடிகர் விக்ரம் நடித்த பீமா படத்தில் பிரகாஷ் ராஜ் ஜோடியாக நடித்துள்ளார்

பிரபல மலையாள நடிகை லட்சுமி கோபால்சாமி தான் எதிர்பார்த்ததுபோன்ற நபர் கிடைக்காததால் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை என்றும், இன்னும் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

மலையாள படங்களில் அம்மா கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்றவர் லட்சுமி கோபால்சுவாமி. இவர் நடிகர் விக்ரம் நடித்த பீமா படத்தில் பிரகாஷ் ராஜ் ஜோடியாக நடித்துள்ளார். மேலும், சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவருக்கு 49 வயதாகிவிட்டது. இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஏன் என்று கேட்டபோது அவர் கூறிய காரணம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், “நான் மலையாள திரை உலகில் மோகன்லால், சுரேஷ்கோபி உள்ளிட்டவர்களுடன் நடித்து வருகிறேன். அவர்கள் தங்கள் மனைவியை தாங்கும் விதத்தைப் பார்த்து அசந்துவிட்டேன். தங்கள் வீட்டுப் பெண்களை அவர்கள் நடத்தும் விதம், நாகரீகமாகப் பழகும் பண்பு, மற்றவர்களுக்கு அவர்கள் அளிக்கும் மரியாதை என எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து ரசித்தேன்.

எனக்கு வரப்போகும் கணவரும் கூட இவர்களைப் போல இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இதுநாள் வரை அப்படி ஒரு நபரை நான் காணவில்லை. கிடைத்தால் திருமணம் செய்துகொள்ள ஆசைதான்” என்றார்.